பக்கம் : 649
 

மாதவ சேனை சுயம்பிரபையின் ஓவியத்தைப் பலகையில் வரைந்து, பட்டுறையின்மூடி,
எடுத்துக் கொண்டு சசிதேவியின்பாற் சென்றாள் என்க.
 

(180)

 

1007.

மையகத் தலர்ந்த வாட்கண் மாதவ சேனை சென்று
வையகத் தரசன் றேவி மலரடி வணங்க லோடு
மெய்யகத் துவகை கூர விரும்பித்தன் னருகு கூவிக்
கையகத் 1ததுவென் னென்னக் கன்னிய துருவ மென்றாள்.
 

     (இ - ள்.) மை அகத்து அலர்ந்த வாள்கண் மாதவசேனை சென்று - மை
தீட்டப்பெற்ற உள்ளகத்தையுடைய அகன்ற வாள்போன்ற கண்களையுடை மாதவசேனை
என்பவள் போய், வையகத்து அரசன்தேவி - பயாபதி மன்னன் மனைவியாகிய
சசிதேவியினுடைய, மலரடி வணங்கலோடும் - மலர் போன்ற திருவடிகளை
வணங்கியவுடனே, மெய்யகத்து உவகைகூர - அச் சசிதேவி, தன் உடலில் உவகையின்
மெய்ப்பாடு மிக்குத்தோன்றும வண்ணம், விரும்பி தன் அருகுகூவி - மாதவசேனையை
மிகவும் ஆர்வஞ்செய்து தன் அண்மையிலே அழைத்து, கையகத்தது என் என்ன? -
மாதவசேனாய் நின் கையின்கண் கொண்டுள்ள பொருள் என்னையோ என்று வினவ,
கன்னியது உருவம் என்றாள் - அடிகளே இது சுயம்பிரபையின் உருவந்தீட்டிய
ஓவியப்பலகை என்று மாதவசேனை இறுத்தாள், (எ - று.)
ஓவியத்தோடே சென்று, மாதவசேனை சசியை வணங்க, அத்தேவி, ‘நின் கையகத்த
தென்னை?’ என்ன “இது கன்னியின் ஓவிய உருவம் ' என்றாள், என்க.
 

( 181 )

 

1008.

அணிகலம் பரிந்து நங்கை யணிமரு ளுருவந் தந்த
2மணிமருண் முறுவற் செவ்வாய் மாதவ சேனைக் கீந்து
பணிவரும் பலகை தன்மேற் பாவையைக் காண்டு மென்றாள்
துணிவரும் பவழத் 3துண்டந் துடிக்கின்ற தனைய வாயாள்.
 

     (இ - ள்.) துணிவரும் பவழத்துண்டம் துடிக்கின்றது அனைய வாயாள் - துண்டாகத்
தறிக்கப்பட்ட பவழத்தினது துணுக்குகள் துடித்தால் ஒத்தசைகின்ற அதரங்களையுடைய
சசிதேவி, நங்கை-சுயம்பிரபையினுடைய, அணிமருள் உருவந்தந்த - அழகே மருளுதற்குக்
காரணமான உருவக்கிழியைக் கொணர்ந்து தந்த, மணிமருள் முறுவற் செவ்வாய் - முத்தும்
பவளமும் நிரலே மருளுதற்குக் காரணமான பற்களையும் சிவந்த வாயையுமுடைய,
மாதவசேனைக்கு - மாதவசேனை என்பவளுக்கு, அணிகலம் ஈந்து - உயரிய
அணிகலன்களைப் பரிசிலாக அளித்து, பரிந்து - பரிவுகொண்டு, பணிவரும் பலகை
தன்மேல் - தொழில் நுணுக்கமுடைய இப்பளிங்குப் பலகையிற்றீட்டப்பட்ட, பாவையைக்
காண்டும் என்றாள் - சுயம்பிரபையின் ஓவியத்தை யாம் காண்பாம்என்று கூறினாள், (எ -
று.)

 

     (பாடம்) 1. திதுவென். 2. மணி மருளுருவச். 3. தண்டம்.