பக்கம் : 650
 

மாதவ சேனையைத் தேவி மகிழ்ந்து அணிகலம் ஈந்து, பாவையை யாம் காண்டும் என்றாள்
என்க.
 

(182)

சசிதேவி அவ் வோவியத்தைக் கண்டு வியத்தல்

1009.

மணிதெளித் தமைக்கப் பட்ட வண்ணமே வண்ண மாகத்
துணியமுன் கலந்து செய்த துகிலிகைத் தொழில்க ணோக்கி
அணியின தொளிக ளோவிவ் வணங்கின 1துருவ மோவிக்
கணிநலங் கருத லாகாக் கண்கவர் சோதி யென்றாள்.
 

     (இ - ள்.) மணி தெளித்து அமைக்கப்பட்ட வண்ணமே வண்ணமாக - ஒன்பது
வகையாகிய மணிகளின் பல்வேறு வகையாய நிறங்களை ஆராய்ந்து தெளிந்து
அம்மணிகளின் நிறங்களே அவ்வோவியத்திற்கும் நிறமாக அமையுமாறு, துணியமுன் கலந்து
- பொருந்துமாற்றால் வண்ணங்களை முன்னர்க் கூட்டிக்கொண்டு, செய்த துகிலிகைத்
தொழில்கள் நோக்கி - செய்யப்பட்ட தூரியக்கோல்களின் நுணுகிய தொழிற்றிறங்களை
ஆராய்ந்து உணர்ந்து, கணிநலம் கருதலாகா இக்கண்கவர் சோதி - ஆராய்ச்சிவன்மையாகிய
நலத்தால் ஆராய்ந்து காண்டற்கரிதாகிய கண்ணைக் கவர்கின்ற இவ்வொளிப் பிழம்புதான்,
அணியினது ஒளிகளோ - சுயம்பிரபையின் அணிகலன்களால் ஆய ஒளிகளோ அல்லது,
அணங்கினது உருவமோ - சுயம்பிரபையின் திருமேனியின் இயற்கை யொளியோ, என்றாள்
என்று வியந்தாள், (எ - று.)

மணிகளின் ஒளிபோன்ற வண்ணந்தீட்டப் பெற்ற சோதி மிக்க அவ்வோவிய வுருவைக்
கண்ட தேவி, வியந்து இவ் வொளி, நங்கைக்கு அணிகளானியன்ற வொளியோ அவள்
மேனியின் இயற்கை ஒளியோ! என்று, வியந்தாள் என்க.
 

( 183 )

மாதவசேனை சுயம்பிரபையின் அழகைப் புகழ்தல்

1010.

பழுதிய லிலாத பாவை யுருவமோர் படியி னாலு
மெழுதுதற் கரிதி யார்க்கு மிலங்கொளி யுருவ மேனி
மொழிதலுக் கரிதா லத்தை முருகுவேய் குழலி மற்றுன்
றொழுதகை யருளி 2னன்றே துணிந்தியா னெழுதிற் றென்றான்.

    

 

     (பாடம்) 1. கருமை யானுங். 2. னானுந்.