பக்கம் : 657
 

போர் செய்யத் தொடங்குவோர், படைவலி, காலம், முதலியவற்றை நோக்கி அவை
சிறந்தவிடத்துக் “கொக்கின் குத்தொக்கÓ விரைந்து தொடங்குவரன்றே! அங்ஙனமே காமன்
சுடுசரந் தொடுக்கலுற்றான் என்க.
 

( 193 )

திவிட்டனின் காம வெப்பம்

1020.

மண்ணியல் வளாக மெல்லா
     மகிழ்ந்துடன் வணங்கும் போழ்து
முண்ணனி மகிழ்தல் செல்லா
     வொளியுடை யுருவக் காளை
1கண்ணினிற் காத லாடன் 2
     கண்ணிய வுருவங் கண்டே
வெண்ணெயின் குன்றந் தீயால்
     வெதும்புகின் றதனோ டொத்தான்.
 

     இது முதல் 5 செய்யுள் ஒருதொடர்

     (இ - ள்.) மண்ணியல் வளாகம் எல்லாம் - மண்திணிந்த உலகம் அனைத்தும்,
மகிழ்ந்து உடன் வணங்கும்போதும் - உவகையுடனே தன்னடியில் ஒருங்குகூடி வந்து
வீழ்ந்து வணங்குகின்ற பொழுதும், நனி உள் மகிழ்தல் செல்லா - மிக்கு அகம்
மகிழ்தலில்லாத, ஒளியுடையுருவக் காளை - பெருமிதமுடைய அழகான்மிக்க உருவமுடைய
திவிட்டன், காதலாள் தன் கண்ணிய உருவம் கண்டே - தன் காதலாளாகிய சுயம்பிரபையின்
உருவம் என்று கருதி உணரப்பட்ட அவ்வோவிய உருவத்தைக் கண்டே, வெண்ணெயின்
குன்றம் தீயால் வெதும்புகின்றத னோடு ஒத்தான் - நெருப்புற்று வெதும்பி உருகும்
வெண்ணெய்க் குன்றம் போன்று உள்ளம் உருகினான், (எ - று,)

கண்ணிய உருவங்கண்டே உருகுவான் உண்மையுருவம் கண்டால் என்படும் என்பது கருத்து.
 

( 194 )

இதுவுமது

1021.

மாகத்து மதிய மன்ன வாணுதன் மடந்தை தன்னை
யாகத்து ளடக்கி 3மன்னு மணிநுத லழகு நோக்கி
நாகத்தை நடுக்கு மல்கு னங்கைதன் றிறத்துக் காம
வேகத்தை மெல்ல மெல்ல வில்வலான் பெருக்கி யிட்டான்.

    

 

     (பாடம்) 1. கண்ணிய. 2. கண்ணினி னுருவம். 3. பின்னும்.