பக்கம் : 663
 

     (இ - ள்.) வெய்யொளி நிறைந்த நீல விசும்பென்னும் - வெவ்விய ஒளியான் நிறைந்த
நீலநிறமான விண் என்னும், மணிகொள் பொய்கை - அழகிய குளத்தின்கண்ணே,
செய்யொளிச் செக்கர் என்னும் - சிவந்த ஒளியுடைய செக்கர் வானம் என்னும் செம்புனல்
பரந்து தேறி - செவ்விய புதுப்புனல் பரவித் தெளிந்திட, மையிருள் என்னும் சேற்றில் -
அப்பொய்கைக்கண் உள்ள கரிய இருள் ஆகிய சேற்றின்கண்ணே வளர்திங்கட்கதிர்கள்
என்னும் - வளர்தலையுடைய திங்கள் மண்டிலத்தின் சுடர்களாகிய, மொய் இளம் கமல
நாளம் வளையங்கள் முளைத்த அன்றே - செறிந்த இளமையுடைய தாமரையின்
தாள்களையுடைய சுருள்கள் முளைப்பனவாயின அன்றே: அசை, (எ - று.)

தாமரை வளையம் - தாமரை யிலைகளின் சுருண்ட தளிர்கள் - அவை
வெண்ணிறமுடையன வாகலின் நிலாவொளிக் கற்றைக்கு உவமை கூறினார்.
 

( 204 )

இதுவுமது

1031.

அங்கொளி விசும்பிற் றோன்றி யந்திவா னகட்டுக் கொண்ட
     திங்களங் குழவி பால்வாய்த் தீங்கதிர் 1முறுவ னோக்கித்
தங்கொளி விரிந்த வாம்ப றாமரை குவிந்த வாங்கே
     2யெங்குள ருலகுக் கெல்லா மொருவா யினிய நீரார்.
 

     (இ - ள்.) அங்கு ஒளி விசும்பிற்றோன்றி அந்திவான் அகட்டுக்கொண்ட -
அவ்விடத்தே ஒளியுடைய விசும்பின் கண்ணே தோன்றிச் செக்கர் வானத்தின் இடையே
இருத்தலைக் கொண்டுள்ள, அங்குழவித் திங்கள் - அழகிய இளைதாகிய பிறையினது,
பாலவாய் தீம் கதிர்முறுவல நோக்கி - பால்போலும் நிலபுடைய வாயிற்றோன்றும் இனிய
வொளியாகிய புன்முறுவலைக் கண்டு, ஆம்பல் தங்கு ஒளிவிரிந்த - ஆம்பல்மலர்கள்
தம்மிடத்தே தங்கிய ஒளியை விரித்தன, தாமரை குவிந்த - தாமரை மலர்கள் கூம்பின,
ஒருவராய் உலகுக்கெல்லாம் இனிய நீரார் எங்குளர் - ஒருவராக இவ்வுலகம் முழுதிற்கும்
இனிமையே செய்யும் தன்மையுடையார் யாண்டுளர்? (இல்லை என்றபடி.)

ஒரு சாரார்க்கு இனிமை செய்யின் மற்றொரு சாரார்க்கு இன்னலாய் முடிதலின், உலகின்
அனைவருக்கும் இனிமையே செய்தல் யார்க்கும் இயல்வதன்று என்பதாம்.
 

( 205 )

தென்றற் சிறப்பு

1032.

மணவாய மல்லிகையின் மதுநனைந்து
     வண்கனிகண் மதர்ப்ப வீசி
யிணர்வாய வனமுல்லை யிதழ்வாரி
     யிளந்திங்கட் 3கதிர்கா லூன்றித்

    

 

     (பாடம்) 1. ரமிழ்த மாந்தி. 2. எங்குளருலகுக்கெல்லாம். 3. கதிர்களூன்றி