பக்கம் : 665
 

     (இ - ள்.) பை பருகும் மணி உமிழ்ந்து - பையின் உள்ளாற்பருக்கும் தன் மணியைக்
கான்று, நிழல்கால் சீப்ப - அம்மணி இருளை அகற்ற, பணநாகம் - படத்தையுடைய பாம்பு,
இரைதேரும் - அம்மணி ஒளியின்கண்ணே தன் இரைகளை ஆராய்கின்ற, பருவமாலை -
பொழுதாகிய இம்மாலைக்காலம், காணில் ஆராய்ந்து காணுமிடத்தே, மைபருகும்
நெடுங்கண்ணார் - மையுண்ணுகின்ற நெடிய கண்களையுடைய மகளிர்கள், மணிமாடமிசை
இட்ட - மணிபதித்த மேனிலை மாடங்களிலே ஏற்றியிடப்பட்ட, வளைவாய்ப் பாண்டில் -
வளைந்த வாயினையுடைய அகல்களின்கண், நெய்பருகு கொழுஞ்சுடரின் இடை -
பெய்யப்பட்ட ஆன்நெய்யை உண்டு கொழுத்த விளக்குப் பிழம்புகளின் ஊடேயும்,
அகில்ஆவியிடை - அகிலிட்டெழீஇய மணப்புகையின் ஊடேயும், நுழைந்து - புகுந்து,
கைபெருகு காமநோய் உடையவர்க்கு - சிறுமை மிகுதற்குக் காரணமான காமப்பிணி
கொண்டவர்க்கு ஓர் கனல் போல வரும் - ஒப்பற்ற நெருப்புப் போன்று
வருவதொன்றாயிருக்கும், (எ - று.)

பருகும் மணி - பருக்கும் மணி. மாலை பாண்டில் நெய் பருகி அகிலாவி யிடைநுழைந்து,
காமநோயுடையவர்க்குக் கனல்போல வரும், என்க.
 

( 207 )

இதுவுமது

1034.

கணிமிடற்ற நறவேங்க யவிர்சுணங்கின்
     மடவார்தங் கைமேற் கொண்டு
பணிமிடற்று மொழிபயிற்றும் பைங்கிளியின்
     செவ்வழியி னிசை மேற் பாட
மணிமிடற்ற செங்கண்ண பவழக்காற்
     கபோதங்கண் மதலை தோறு
மணிமிடற்றி னாலகவ வனங்கனையு
     1மனல்விக்கு மளிய மாலை.

     (இ - ள்.) கணி - காலங்கணித்தறிதற்கு ஏதுவாகிய, நறமிடற்ற வேங்கை - தேனை
மிடற்றின் உண்உடைய வேங்கை மலர்போன்ற, அவிர்சுணங்கின் மடவார் - பொன்னிறமான
திதலைபூத்துத் திகழும் மகளிர்கள் தம்கை மேற்கொண்டு - தம்முடைய கையின்கண்
ஏந்திக்கொண்டு, பணிமிடற்று மொழி பயிற்றும் - அணிகலன்களையுடைய தம் கண்டத்தால்
சொற்களைப் பயிற்றுவிக்கப்பட்ட, பைங்கிளி - பச்சைக்கிளிகள், இன் செவ்வழியின் - இனிய
செவ்வழி என்னும் பண்ணால், இசை மேற்பாட - இசைபாடுதலை மேற்கொள்ளவும்,
மணிமிடற்ற - நீலமணி போன்ற கழுத்தையுடையனவும், செங்கண்ண - சிவந்த கண்களை
யுடையனவும், பவழக்கால் - பவழம்போன்ற கால்களையுடையனவும் ஆகிய,

 

     (பாடம்) 1. மகல்விக்கும் - மகமவிக்கும்.