கபோதங்கள் - புறாவும், மதலைதோறும் - புரைமாடங்கள்தோறும், அணிமிடற்றினால் அகவ - அழகியமிடற்றொலியினாலே அகவவும், மாலை - மாலைக்காலம், அனங்கனையும் - காமவேளையும், அனல்விக்கும் - வெதுப்பும், அளியம் - ஆதலால் யாம் அளிக்கற்பாலேம், ( எ - று.) காமநோய் செய்யும் காமவேளையும் இம்மாலை காமநோயால் அனல்விக்கும் என்க. வேங்கை பூத்தலால் காலம் இன்னதென்று கணித்தல் மரபு. செவ்வழி - மாலைக் காலத்திற்குரிய பண். |
(இ - ள்.) வெஞ்சுடர்வேல் இளையவன் - வெவ்விய சுடருடைய வேல் ஏந்திய திவிட்டன், இனையவின் - இத்தகையவற்றால், மெலிவு எய்த - மெலியா நிற்ப, விசும்பு செல்லும் விஞ்சை அரையன் - விசும்பின்கண் இயங்கும் விச்சாதர வேந்தனாகிய சடிமன்னனுடைய, மட மாமகள் நிலையாது என வினவில் - மடப்பமுடைய சிறந்த மகளாகிய சுயம்பிரபையின் நிலைமை யாதாயிற்று என்று எம்மை வினவுதிராயின், விளம்பக்கேண்மின் - அவள் நிலையினையும் யாம் இனிக் கூறுவாம் கேளுங்கள், தேர் அல்குல் பாடகம் பஞ்சு இலகு கால் பாவையர்கள் - தேர்த்தட்டை ஒத்த அல்குலையும், சிலம்பு அணிந்த அலத்தகம் திகழும் அடியினையும் உடைய மகளிர்கள், பலர் பாராட்ட - பலர் பாராட்டெடுப்ப, செஞ்சுடரோன் மறைபொழுதில் - செஞ்ஞாயிறுபட்ட மாலைப்பொழுதில், சினவரன்றன் திருக்கோயில் - அருகக்கடவுளுடைய சிறந்த கோயிலை, சென்று சார்ந்தாள் - போய் அடைந்தாள், (எ - று,) இதுகாறும், நம்பிநிலைமை கூறினாம்; இனி நங்கைநிலை விளம்புவாம் கேண்மின்; நங்கை இறை கோயிலைச் சென்று எய்தினாள்; எனத் தேவர் கூறினர் என்க. |