பக்கம் : 668
 

 

 

மணங்கிவர்சே வடியினழ 1கெழிலேரோ
     ரொளிபருகி யலரு மாயின்
வணங்கினவ ரொளிவிரிந்து களிசிறந்து
     மதிமகிழன் 2மருளோ வன்றே

     இதுமுதல் 3 செய்யுள்கள் ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி இடைமடக்கி வந்தன
(இ - ள்.) வாமன் - அருகக்கடவுளின், அணங்கு இவர் சேவடியின் - அழகு படர்ந்த செய்ய
திருவடிகளைச் சேர்ந்தமையால், அழகெழில் ஏர்ஓர் ஒளிபருகி - அவ்வடிமலரின் அழகாகிய
வனப்பின் எழுச்சியில் ஒரு சிறு ஒளியைத் தான் உட்கொண்டு, மணங்கமழும் தாமரை -
மணங்கமழ்கின்ற தாமரைமலர், இன்மதுத் திவலை கொப்பளித்து - இனிய தேன் துளிகளைக்
கொப்பளித்து, மதர்த்து -(செழிப்புறுதல் என்னும்) செருக்குற்று, அலரும்போலும் -
மலராநிற்கும், அணங்கு இவர் சேவடியின் அழகு எழில் ஏர் ஓர் ஒளிபருகி அலரும்
ஆயின் - அருகபரமனுடைய அழகு படர்கின்ற செய்ய திருவடிகளின் அழகாகிய வனப்பின்
எழுச்சியில் ஒரு ஒளியைப் பருகிய துணையானே மதர்த்து அலருவதுளதாயின்,
வணங்கினவர் - அவ்வருகனுடைய திருவடிகளை அன்புடனே வணங்கிய அடியார்கள்,
ஒளிவிரிந்து - பேரொளி பரப்பி, களிசிறந்து - இன்பமிக்கு, மதிமகிழல் - உள்ளம்
மகிழ்ச்சியுடையராதல், மருளோ மருட்கைத்தோ? இல்லை என்றபடி ; அன்றே அசை, (எ -
று,)

மருட்கைத்தோ - வியத்தற்குரியதோ. போலும் - ஒப்பில்போலி. தாமரை வாமன் சேவடியின்
அழகில் ஒருசிறிதே பருகி, அந்நன்மையால், கொப்பளித்து மதர்த்து மலரும் ;
அஃதங்ஙனமாயின், அவ்வடியினை அன்போடு வணங்கியவர், ஒளிவிரிந்து, களிசிறந்து,
மகிழல் வியப்பன்றே என்றாள், என்க. மருளோ என்னும் வினா எதிர்மறை ; இயல்பே
ஆகும் என்பது கருத்து.
 

( 211 )

 

1038.

3அரும்பிவரு மரவிந்த 4மறிவரன
     தடிநிழல தடைந்தோ மென்று
சுரும்பிவரி யிசைபாடச் செம்மாந்து
     சுடருமிழ்ந்து துளும்பும் போலுஞ்
5சுரும்பிவரி யிசைபாடச் செம்மாந்து
     சுடருமிழ்ந்து துளும்பு மாயின்
6விரும்பினராய்த் தொழுதெழுவார் மெய்ம்மறப்பு
     முண்மகிழ்வும் வியப்போ வன்றே.

    

 

     (பாடம்) 1. கெழிலே ரொளிபருகி. 2. மருள்வோரன்றே. 3. அரும்பிவ ரரவிந்தம். 4. மறிவரன்ற னடிநிழல். 5. சுரும்பி வரிசைபாட. 6. விரும்பினர்.