பக்கம் : 669
 

     (இ - ள்.) அரும்பிவரும் அரவிந்தம் அரும்பித் தோன்றுதலையுடைய தாமரைமலர்,
அறிவானது அடிநிழல் அடைந்தோம் என்று - அருகனுடைய திருவடிநீழலை எய்தும்
சிறப்பைப் பெறறோம் என்னும் களிப்பால், சுரும்புஇவரி இசைபாட - வண்டுகள் சூழ்ந்து
இசை பாடாநிற்ப, செம்மாந்து - இறுமாப்புற்று, சுடருமிழ்ந்து - ஒளிகான்று,
துளும்பும்போலும் - தேன் துளும்பாநிற்கும், சுரும்புஇவரி இசைபாடச் செம்மாந்து சுடர்
உமிழ்ந்து துளும்பும் ஆயின் - நீழலடைந்த மாத்திரையானே தாமரை வண்டுகள் சூழ்ந்து
தன் இசையைப் பாடாநிற்ப இறுமாப்புற்று ஒளிகான்று தேன்துளும்புவதாயின், விரும்பினரா
தொழுதெழுவார் - அவ்வருகக்கடவுளின் சேவடிகளை விழைந்தவர்களாய் உறங்
கியெழுமமயத்தும் தொழுதே எழுகின்ற அடியார்கள் எய்தும், மெய்மறப்பும் உள்மகிழ்வும் -
தம்மை மறத்தலும் உள்ள மகிழ்தலுமாகிய இந்நிலை, வியப்போ ! அன்றே - வியத்தற்குரிய
தொன்றன்று, (எ - று.)

தாமரை அறிவரனது அடி சேர்ந்த நன்மையால், இசை பாடச் செம்மாந்து சுடருமிழ்ந்து
துளும்பும் ; அஃதங்ஙனமாயின், அவனடியை விரும்பித் தொழுதெழுவார், மெய்ம்மறப்பும்,
உண்மகிழ்வும், வியக்கற்பாலன அல்லவே ! என்றாள், என்க.
 

( 212 )

 

1039.

அழலணங்னு 1தாமரையா ரருளாழி
     யுடையகோ னடிக்கீழ்ச் சேர்ந்து
நிழலணங்கி முருகுயிர்த்து நிரந்தலர்ந்து
     தோடேந்தி நிழற்றும் போலு
நிழலணங்கி முருகுயிர்த்து நிரந்தலர்ந்து
     தோடேந்தி நிழற்று மாயிற்
றொழிலணங்கு மனமுடையார் சூழொளியும்
     வீழ்குளிப்புஞ் சொல்லோ வன்றே.
 

     (இ - ள்.) அழல் அணங்கு தாமரை - நெருப்புப் பிழம்பை ஒத்த தாமரை மலர், ஆர்
அருள் ஆழி உடையகோன் - பொருந்திய அறவாழியையுடைய அருகக் கடவுளின், அடிக்
கீழ் - திருவடித்தலத்தின்கீழே,
சேர்ந்து - எய்தி, நிழல் அணங்கி - பிற ஒளியை வருத்தி, முருகு உயிர்த்து - மணம்வீசி,
நிரந்து - பரவி, அலர்ந்து - மலர்ந்து, தோடுஏந்தி - இதழ்களைத் தரித்து, நிழற்றும் -
ஒளிரும், நிழல் அணங்கி - பிற ஒளியை வருத்தி, முருகு உயிர்த்து - மணம்வீசி, நிரந்து -
பரவி, அலர்ந்து - மலர்ந்து, தோடுஏந்தி - இதழ்களைத் தரித்து, நிழற்றும் ஆயில் -
நிழற்றுதல் உளதாயின், தொழில் அணங்கு மனம் உடையோர் - அருகனுடைய பாதத்தைத்
தொழுதலல்லது பிறதொழில் செய்தற்கு வருந்துமியல்புடைய நன்மனத்தையுடையோர்கள்,
சூழ்ஒளியும் வீழ்களிப்பும் சொல்லே அன்றே - சூழ்ந்த ஒளியுடையராதலும், மிக்க
மகிழ்ச்சியுடையராதலும் வியந்துரைக்கற்பாலவல்ல, (எ - று.)

 

     (பாடம்) 1. தாமரை யருளாழி