பக்கம் : 671 | | கோயிலில் நின்று இறை வழிபாடு செய்யும் துணையும் அடங்கியிருந்து, செம்பொன் மாளிகை எய்துதலும், பழைய எண்ணங்கள் கிளர்ந்தெழுதலின், முகிழ்த்த வேட்கையாள் என்றார், என்க. | ( 215 ) | பிறை தோன்றல் | 1042. | செய்யவன் செங்கதிர் சுருக்கச் செக்கர்வான் பையவே கருகலும் பரவை பாற்கதி ரையவே யவிர்கதி ரரும்பு வந்தது வையமே தொழப்படும் வளர்வெண் டிங்களே. | (இ - ள்.) செய்யவன் - ஞாயிறு, செங்கதிர் சுருக்க - தன் சிவந்த சுடர்களைச் சுருக்கிக்கொள்ள, செக்கர்வான் பையவே கருகலும் - செவ்வானமும் மெல்ல இருண்டுவிட்டதாக, வையமே தொழப்படும் - உலகெலாம் வணங்கும் சிறப்புடைய, வளர் வெண்திங்கள் - வெண்மையான வளர்பிறை, ஐய அவிர்கதிர் - அழகியவாய் விரிதலையுடைய வெண்சுடர், அரும்பு - அரும்பி, வந்தது - தோன்றுவதாயிற்று. ஏ நான்கும் அசைகள், (எ - று.) ஞாயிறு கதிர் சுருங்கச் செக்கர் வானம், மெல்ல மெல்ல மறைந்து கருக, வெண்டிங்கள் அரும்பி வந்ததென்க. | ( 216 ) | | 1043. | இருங்கயத் 1தெழின்மலர் நிரந்து மேலதோர் சுருங்கையங் 2கவிழ்ந்தெனத் தோன்று மீன்குழா மரும்பிய பசலைவா னகட்டுத் தாரகை யொருங்கியன் றொளிநகை யுமிழ நோக்கினாள். | (இ - ள்.) பசலைவான் அகட்டு அரும்பிய மீன்குழாம் - ஞாயிறாகிய கணவன் பிரிந் தமையால் பசலைகொண்ட விசும்பின் கண் மலர்ந்த மீன் கூட்டம், இருங்கயத்து எழில்மலர் நிரந்து எனத் தோன்றும் - பெரிய குளத்திலே மலர்ந்துள்ள மலர்கள் பரவியிருந்தாற்போலக் காணப்பட்டது, தாரகை - அம்மீன்கள், ஒருங்கு இயன்று ஒளி நகை உமிழ - ஒருங்கே கூடி ஒளியாகிய சுடரை வீசா நிற்ப, மேலதுஓர் சுருங்கை அங்கு அவிழ்ந்தென நோக்கினாள் - மேனிலை மாடத்தின் கண்ணதாகிய பலகணியைத் திறந்து அம்மலர்களை நோக்கினாற் போன்று நங்கை தன் கண்ணைத் திறந்து அம்மீன்களை நோக்கா நின்றாள், (எ - று.) | |
| (பாடம்) 1. தடமலரலர்ந்து. 2. கவிழ்ந்து போன்று. | | |
|
|