பக்கம் : 677 | | (இ - ள்.) நாளை நாள் என்பது நனித்தும் சேய்த்தென - நாளையாகிற நாள் என்று சொல்லப்படுவது மிகவும் சேய்மைத்தாமே என்று ஒருத்திகூற, வாளையாம் நெடுங்கணீர்! மயங்கி என்னை - மற்றொருத்தி வாள்போலும் நெடிய கண்களையுடைய தோழியீர் நீயிர் நாளைநாள் நனி சேய்த்தென மயங்குதலாற் போந்தபயன் என்னை, இக்கோளை - இந்த உட்கோளை, விசும்பிடை ஆம்குளிர் வெண்டிங்களார் - விசும்பின் கண்ணதாகிய குளிர்ந்த வெண்ணிலாவையுடைய திங்கட் கடவுளை, யாம் தாளை வணங்குபு தாழ்ந்து கேட்டும் ஏ - யாம் ஒன்றுகூடி அவர்தம் அடிகளை வணங்கி அவர்முன் தாழ்ந்து கேட்போமாக, (என்றாள்) (எ - று.) உட்கோள் - நாளைநாள் நனி சேய்த்தென்னும் கொள்கை, திங்களார் நம் வேண்டுகோட்கிரங்கி விரைந்து இயங்குவரேல் நாளைநாள் நனி அண்மைத்தாம் ஆதலின் தாழ்ந்து, கேட்டும் என்றாள் என்க. வாளைமீன்போன்ற கண்ணுமாம். ஐ: சாரியை எனினுமாம். | ( 227 ) | | 1054. | காமனுங் கணைப்பயன் கொண்டு கண்களால் 1நாமுநன் னல்வினை நுகரு நாளவாய் யாமமிங் கொருங்குட னகல வென்றுபோய் வாமன்ற னகருழை வரங்கொள் வாங்கொலோ. | (இ - ள்.) காமனும் கணைப்பயன்கொண்டு - காமவேளும் தான் ஏவுகின்ற மலர்வாளியானாய பயனை எய்தவும், நாமும் நல்நல்வினை கண்களால் நுகரும் - தோழியீர் யாம் செய்த மிக்க நல்லறங்களின் பயனை நம் கண்களாலே நுகர்தற்கும் உரித்தாயுள, நாள்அவாய் - அந்நாளை யாம் விரும்பி, வாமன்றன் நகருழைப் போய் - அருகபரமனாருடைய திருக்கோயிலினுட் சென்று, யாமம் இங்கு ஒருங்குடன் அகல என்று - ஒன்றன்பின் ஒன்றாய் மெல்லக் கழியும் இயல்புடைய இவ்விரவின்கண் உள்ள யாமம் அனைத்தும் ஒன்றுபட்டு விரைந்து ஒன்றாய்க் கழிவதாக அருள்செய்ய வேண்டும் என்று, வரங்கொள்வாம் கொல் - வரம்தரவேண்டிக்கொள்வோம் என்று ஒருத்தி கூறினாள். கொல் ஓ இரண்டும் அசைகள், (எ - று.) மன்மதன் தன் தொழிலில் வெற்றிகோடல் இருவரும் கூடுதலே யாதலின், காமனும் கணைப்பயன் கொள்ள என்றாள். கணைப்பயன் - வெற்றி. யாமம் ஒருங்குடன் கழிய என்றது - ஒன்றன்பின் ஒன்றாய்க் கழியாதே ஒருசேரக் கழிய என்றபடி. இறைவன் எல்லாம் வல்லனாகலின் - இவ்வாறு செய்வன் என்றாள், எனவே திங்களாரை வேண்டுவம், என்றாளை மறுத்தவாறாயிற்று. | ( 228 ) |
| (பாடம்) 1. நாமுனன். | | |
|
|