பக்கம் : 681 | | பறவைகளின் தன்மை | 1061. | இடஞ்சிறை யிளம்பெடைக் கீந்து பார்ப்பின்மேற் றடஞ்சிறை வலத்தது கோலித் தாந்தம தொடுங்குதாண் முடங்கவைத் துறங்கு கின்றன புடங்கொள்பூம் பொழிலிடைப் புள்ளின் சேவலே. | (இ - ள்.) புடங்கொள் பூம்பொழில் இடை - புடைநகரிலே அமைந்த மலர்ச்சோலைகளில், புள்ளின்சேவல் - ஆண் பறவைகள், இடஞ்சிறை இளம்பெடைக்கீந்து - தம் இடப்பாகத்துச் சிறகால், இளமைமிக்க தம் காதற் பெடைகளை யணைத்து, பார்ப்பின் மேல் - தம் குஞ்சுகளின்மேல், வலத்தது தடஞ்சிறைகோலி - தம் வலப்பாகத்துப் பெரிய சிறகை விரித்து, தாம் தமது ஒடுங்குதாண் முடங்க வைத்து - தாம் தம்முடைய ஒடுங்கிய கால்களை முடக்கி வைத்துக்கொண்டு, உறங்குகின்றன - துயில்வன வாயின, ஏ : அசை, (எ - று.) இதன்கண் பறவைகளின் அன்புடைமை மிக இனிமை பயப்பக் கூறப்பட்டது காண்க. புடம் - புடை ; புடைநகர். பொழிலிடைச் சேவல் தம்மிடப்பக்கத்துச் சிறகால் இன்றுணைப் பெடைதழுவி, வலப்பக்கத்துச் சிறகால் பார்ப்பணைத்துத் துயின்றன என்க. | ( 235 ) | அன்றிலின் காதற்சிறப்பு | 1062. | கனைந்ததங் காதலிற் கனவிக் கண்டிறந் தினைந்தபோன் றிடையிடை நோக்கி யின்குரல் புனைந்தகம் புணர்பெடை புல்லி மெல்லவே அனந்தருண் முரன்றன வன்றிற் சேவலே. | (இ - ள்.) அன்றில் சேவல் - ஆண் அன்றிற் பறவைகள் கனைந்த தம் காதலில் செறிந்த தமது காதல் மிகுதியால், கனவி - கனவுகண்டு, கண்திறந்து - தம் கண்களை விழித்து, இனைந்த போன்று - பிரிவாற்றாமையின் வருந்தியன போல, இடையிடை நோக்கி - தம் காதற் பெடையை அடிக்கடி பார்த்து, இன்குரல் புனைந்து - தம் இனிய குரலாலே மெல்லக் கூவி, அகம்புணர் பெடை - தம் சிறககத்தே பொருந்தும் அப்பெடை அன்றிலை, புல்லி - தம் சிறகரால் பொருந்த அணைத்துக் கொண்டு, அனந்தருள் - தம் உறக்கத் தூடேயும், மெல்ல முரன்றன - மெல்லத் தம் துணைபயிர் ஒலியைச் செய்தன, (எ - று.) காதல்மிக்க அன்றிற்சேவல், தம் பெடையைப் பிரிந்தனபோலக் கனவு கண்டு பின் கண்திறந்து, பெடையை இடையிடை நோக்கி, இன்குரலாலே மெல்லென அழைத்து, உறக்கத்தினும் முரன்றன, என்க. | ( 236 ) | | |
|
|