பக்கம் : 683 | | | 1065. | கிளர்த்தன கிலுகிலுப் பரவப் புட்குலாம் வளர்த்தன மகரயாழ் மருளி யின்னிசை தளர்த்தன கருங்கடற் றரங்கந் தன்னமே விளர்த்தது குணதிசை வேலை வட்டமே. | (இ - ள்.) குலாம்புள் கிலு கிலுப்பு அரவம் - தம்முள் குலாவுதலையுடைய பறவைகளின் கிலுகிலு என்னும் ஒசை, கிளர்த்தன - ஆரவாரித்தன, மகரயாழ் மருளி இன் இசை - மகரயாழினது மருட்கையூட்டும் இனிய இசை, வளர்த்தன - எழுப்பப்பட்டன, கருங்கடற்றரங்கம் - கரியகடலின் அலைகள், தளர்த்தன - குறைந்தன, குணதிசை வேலைவட்டம் தன்னமே விளர்த்தது - கீழ்த்திசைக் கண்ணதாகிய வளைகடல் சிறிது வெள்ளென விளர்த்தது, (எ - று.) தன்னம் - சிறிது. வைகறைப் போதில் காற்றியக்கம் குறைதலால் அலைகள் சிறிது அடங்குதல் இயல்பு. தளர்த்தன - தளர்ந்தன : வலித்தல் விகாரம். பறவைகள் துயில்நீத்து ஒலித்தன, பாணர்கள் யாழ் இசை எழீ இயினர், கடற்றரங்கம் தளர்ந்தன, குணதிசை விளர்த்தது என்க. | ( 239 ) | ஞாயிறு தோன்றுதல் | 1066. | ஆணைசெய் தரசுவீற் றிருப்ப வாயிடைக் கோணைசெய் குறும்புகூர் மடங்கு மாறுபோற் சேணுயர் திகிரியான் கதிர்சென் றூன்றலும் பாணியாற் 1கரந்தமுன் பரந்த சோதியே. | (இ - ள்.) அரசு ஆணைசெய்து வீற்றிருப்ப - ஆற்றலுடைய அரசன் ஒருவன் செங்கோன்மையுடையவனாய் ஆணைச்சக்கரம் உருட்டி அரியணையில் வீற்றிருப்பானாக, ஆயிடை - அப்பொழுது, கோணை செய் குறும்பு - தீமையே செய்யும் இயல்புடைக் கொல் குறும்புகள், கூர் மடங்கும் ஆறுபோல் - தம்மிகைச்செயல் ஒழிவதை ஒப்ப, சேண் உயர் திகிரியான் - விசும்பின்கண் உயர்த்திய ஒற்றை உருளையையுடைய ஞாயிற்றுக் கடவுளின், கதிர் சென்று ஊன்றலும் - சுடர் பரந்து நிலவியவுடன், முன் பரந்த சோதி - முன்னர்ப் பரந்து திகழ்ந்த உடுக்களின் ஒளி, பாணியால் கரந்த - அவ்வைகறைக் காலப்பகுதியோடே மறைந்தொழிந்தன, (எ - று.) கோண் + ஐ = கோணை - கோணுதலையுடைய செயல் எனவே தீவினை என்றபடி. பாணி - காலம். | |
| (பாடம்) 1. கரந்தன. | | |
|
|