பக்கம் : 684 | | “உரைசெய் திகிரிதனை யுருட்டி ஒருகோலோச்சி உலகாண்ட அரைச னொதுங்கத் தலையெடுத்த குறும்பு போன்ற தரக்காம்பல்“ என்று கம்பநாடர், இரவின் வருகையின் பொருட்டு இச்செய்யுட் கருத்தை மாற்றி யமைத்துக் கொண்டமை காண்க. | ( 240 ) | | 1067. | விளித்தன புலரிவெண் சங்கம் வேரியாற் களித்தன கயமலர்த் தொழுதி யம்மல ரொளித்துமுன் னுறங்கிய வொலிவண் டார்த்தன தெளித்தது செறிபொழிற் றேம்பெய் மாரியே. | (இ - ள்.) புலரி வெண்சங்கம் விளித்தன - விடியற் காலத்திலே ஒலிக்கும் மரபினவாய மங்கலச் சங்கங்கள் முழங்கின, வேரியால் கயம் மலர்த் தொழுதி - மணத்துடனே குளத்தின் கண்ணவாய தாமரை மலர்க் கூட்டங்கள், களித்தன - மலர்ந்து விளங்கின, அம்மலர் ஒளித்து முன் உறங்கிய ஒலி வண்டு - அத்தாமரை மலர்களின் அகத்தே முதல்நாள் மாலை ஒளித்து உறங்கிய இசைவண்டுகள் உறக்கம் ஒழித்தெழுந்து, ஆர்த்தன - ஆரவாரித்தன, செறிபொழில் தேம் பெய் மாரி தெளித்தது - செறிந்த பூஞ்சோலை தேனாகப் பெய்தலையுடைய மழையைப் பொழிந்தது, (எ - று.) கதிர் தோன்றுங்கால் கோட்டுப்பூக்கள் மலர்ந்தது தேன் துளித்த லுண்மையின் தேம் பெய்மாரி தெளித்த தென்றார். | ( 241 ) | | 1068. | தூண்டிய சுடர்விளக் கன்ன கன்னியோ டாண்டகை யழல்வலஞ் செய்யு மாரணி காண்டகை யுடைத்தது காண்டு நாமென வீண்டிய கதிரவ னுதய மேறினான். | (இ - ள்.) தூண்டிய சுடர்விளக்கு அன்ன கன்னியோடு - தூண்டப்பட்ட ஒளிப்பிழம்பையுடைய விளக்கைப் போன்ற சுயம்பிரபையுடனே, ஆண்டகை - திவிட்டநம்பி, அழல் வலம் செய்யும் ஆர் அணி - திருமணவினையில் தீயை வலம்வரும் பேரழகு, காண் தகை உடைத்து - காணத்தகும் மாண்புடையதாகலின், அது நாம் காண்டும் என - அக்காட்சியை யாமும் சென்று காண்போம் என்று கருதியவளைப்போன்று, ஈண்டிய கதிரவன் - செறிந்த சுடரையுடைய ஞாயிறு, உதயம் ஏறினான் - உதயகிரியின் கண் ஏறித் தோன்றுவானாயினான். ( எ - று.) தீவலஞ் செய்தவனைக் காண விரும்பி ஞாயிறு குணதிசையில் வந்து தோன்றினான், என்க. | ( 242 ) |
| (பாடம்) 1. யாமென. 2. நணித்துஞ், நணித்துச். | | |
|
|