பக்கம் : 686 | | விழா முரசு அறைதல் | 1071. | குருமா மணிவேய் குடைமும் மையுடைப் பெருமா னடிபே ணியபூ சனைநாள் கருமால் களியா னைகண்மேற் கனபொன் அருமா முரசார்ப் பவறைந் தனரே. | (இ - ள்.) குருமாமணி வேய் குடை மும்மை உடைப் பெருமான் - நிறமமைந்த மணிகளாலே அழகு செய்யப்பட்ட குடைகள் மூன்றனையுடைய அருகக்கடவுளின், அடி பேணிய - திருவடிகளைப் போற்றுதற் பொருட்டு, பூசனைநாள் - விழா நாளை, கருமால் களியானைகள்மேல் - கரிய நிறமுடைய பெரிய மதமயக்கம் கொண்ட அரசுவாக்களின் எருத்தத்தே, அருமாமுரசு ஆர்ப்ப அறைந்தனரே - அரிய பெரிய முரசங்களை ஏற்றி ஆரவாரிப்பச் செய்து அறிவிப்பராயினர், (எ - று.) முக்குடை நிழற்றும், பெருமான் திருவிழா நாளை, யானையேறி முரசறைந்து, மாநகர்க் கீந்தார் என்க. | ( 245 ) | | 1072. | முரசும் 1முழவின் குழுவும் முடிசேர் 2அரசன் னகரார் குழுவுங் கெழுமி விரையும் புகையும் 3விரவும் பலியின் இரையுந் நெடுவீ திநிறைத் தனவே. | (இ - ள்.) முரசும் முழவின் குழுவும் - அவ்வழி முரசங்களும் மத்தளங்களும், ஆகிய இன்னோரன்ன தோற்கருவியின் கூட்டங்களும், அரசன் நகரார்குழுவும் கெழுமி - அப் போதன நகரத்தே வாழ்கின்ற மாந்தருடைய கூட்டங்களும் நெருங்கி, விரையும் புகையும் விரவும் பலியின் - மணப்பொருள்களும் மணப்புகையும் கலந்த கடவுட் பலியோடு, இரையும் நெடுவீதி - முழக்கமுடைய நீண்ட தெருக்களை, நிறைத்தன - நிறைத்து விட்டன, (எ - று.) பலி - கடவுட்கியற்றும் பூசனைப்பொருள். குழுவும், குழுவும், பலியோடு, கெழுமி, நிறைத்தன என்க. இனிக் கெழுமிப் பலியால் வீதி நிறைத்தன எனலும் ஒன்று. | ( 246 ) | | 1073. | பிடியுங் களிறும் பிறவுந் நெரிவுற் றடியும் 4மிடவா 5மிடமின் 6றிலகும் கொடியுங் குடையுங் குளிர்சா மரமும் முடியின் சுடரும் மிசைமூ டினவே. | | |
| (பாடம்) 1. முழவும் குழுமி. 2. அரசர் நகரின் குழுவும், அரசன் நகரின் குழுவும். 3. மலரும். 4. மிடலா. 5. மிடநன். 6. றிலது. | | |
|
|