பக்கம் : 687 | | (இ - ள்.) பிடியும் களிறும் பிறவும் நெரிவுற்று அடியும் இடஆம் இடமின்று - பெண்ணியானைகளும் ஆணியானைகளும் குதிரை முதலிய பிறவுடம் கூடி நெருக்குதலாலே தெருக்கள் ஓர் அடிதானும் வைத்தற்கு வேண்டிய சிறிதிடமும் இலவாயின, இலகும் கொடியும் குடையும் குளிர்சாமரமும் முடியின் சுடரும் - திகழ்கின்ற கொடிக்குழாங்களும் குடைக்குழாங்களும், குளிர்நல்கும் சாமரைக்குழாங்களும் முடிமுதலிய அணிகலன்களின் ஒளிக்குழாங்களும், மிசைமூடின - விசும்பை நிறைத்தன, (எ - று.) பிடி முதலியன நெரிவுற்று மண் அடியிட இடமில்லை; கொடி முதலியன நெரிவுற்று விண் மூடின என்க. | ( 247 ) | மணமுரசு அறைதல் | 1074. | வழுவின் னெறிவா மனமா நகர்வாய் விழவின் னணமாக 1விதித் தனராய்க் கழுவும் மணிபோல் பவடன் கடிநாள் எழுவும் முரசெங் குமியம் பினவே. | (இ - ள்.) வாமன மாநகர்வாய் - அருகபரமேட்டியின் திருக்கோயில்களில், இன்னணமாக விழவு வழுவில் நெறி விதித்தனராய் - இவ்வாறு திருவிழாக்களைக் குற்றமின்றி நூல்கள் கூறிய வழியானே நிகழ்த்தினவர்களாய் இருக்கும்பொழுதே ஒருசார், கழுவும் மணி போல்பவள் தன் கடிநாள் - மாசுதீர்த்த மணியை யொப்பாளாகிய சுயம்பிரபையின் திருமண நன்னாளை, எழவும் முரசு எங்கும் இயம்பின - இசை யெழுப்புதலையுடைய முரசு எவ்விடத்தும் அறிவிப்பனவாயின, (எ - று.) வாமன் + அ. அ : ஆறாதவன் பன்மை உருபு. அருகபரமேட்டிக்கு விதிமுறை விழாவெடுத்து, நங்கையின் மணநாளை, மாநகர்க்கு முரசறைந்து தெரித்தனர் என்க. | ( 248 ) | | 1075. | நடைமா லைநடந் ததுநந் திமுகம் புடைமா லைபுகுந் தனர்புண் ணியநீர் இடைமா லைநிகழ்ந் ததொரேத் தரவம் கடைமா லைநிகழ்ந் ததுகாப் பணியே. | (இ - ள்.) நந்திமுகம் - இறைவனுடைய திருவுருவத்தின் கண், புண்ணியநீர் - மங்கலநீராட்டு, நடைமாலை - நடந்தது - நூல்களிற்கூறும் நிகழ்ச்சி முறையானே நடத்தப்பட்டது, புடைமாலை புகுந்தனர் - இடங்கள் | |
| (பாடம்) 1. விதர்த்தனராய்க். | | |
|
|