பக்கம் : 688 | | தோறும் நிரலாக மக்கள் புகுந்தனர், இடை - நடுவே, மாலை - நிரலாக, ஓர் ஏத்தரவம் - மந்திரமொழி ஓதும் ஓர் இசை, நிகழ்ந்தது - நிகழலாயிற்று, கடைமாலை - இறுதியில், காப்பு அணி நிகழ்ந்தது - காப்பதணிதலாகிய கரணம் நிகழலாயிற்று, (எ - று.) நந்தி - அழிவற்றவன்; அருகன். முகம்: ஏழாவதன் உருபு, புண்ணியநீர் -மங்கலநீராட்டு. காப்பணிதல் - இறுதியில் நிகழ்த்தப்படும் ஒரு நிகழ்ச்சி, | ( 249 ) | மணமுரசு அறைதல் | 1076. | திரைசங் கொலியோ டுசிறந் தனபோன் முரைசங் கொலியோ டுமுழங் கியெழ உரைசங் கொலியோ டுணரா வகையா லரைசங் கொலியோ டெழவார்த் தனவே. | (இ - ள்.) அங்கு அரசு ஒலியோடு எழ - அவ்விட,த்தே மன்னர்கள் பல்லியங்களின் இசையோடே எழாநிற்ப, முரசு ஒலியோடு முழங்கியெழ - முரசுகள் இசையோடு ஆரவாரித்து எழ, அங்கு - அவ்விடத்தே, உரை சங்கு ஒலியோடு - கூறப்படுகின்ற சங்கங்களின் முழக்கத்தோடே, உணராவகையால் - இது சங்கொலி இது முரசொலி என்றின்னவகை வேற்றுமை உணரவியலாதபடி திரை சங்கொலியோடு சிறந்தன போல - அலைகடல் ஒலி தன்னகத்தேயுள்ள சங்கங்களின் முழக்கோடே கலந்து சிறப்புற்று முழங்குதலைப் போன்று, ஆர்த்தன - ஆரவாரித்தன, (எ - று,) முரசங்கள் கடல் போன்று முழங்கின; அரைசர்கள் இன்னிசையோடே எழுந்தனர், என்க. | ( 250 ) | | 1077. | துணிமுத் தநகைத் துவர்வா யிளையார் கணிமுத் தணிசிந் தியகண் விரவி 1மணிமுத் தமணற் றிடலா கிமறைத் தணிமுத் 2துமிழ்வீ தியடுக் குநவே. | (இ - ள்.) துணி முத்த நகை துவர்வாய் இளையார் - தெளிந்த ஒளியையுடைய முத்தம் போன்ற பற்களையும் பவளம் போன்ற திருவாயையையுமுடைய இளமகளிர்கள், கணிமுத்தணி சிந்திய - ஆராய்ந்து கோக்கப்பட்ட வடங்களை ஊடற்கண் அறுத்துதிர்க்கப்பட்ட முத்துக்கள், கண்விரவி - வீதிகளிடந்தோறும் பரவி, முத்தமணி மணல் திடலாகி - முத்துமணிகளாகிய மணலாலியன்ற திடர்போல ஆகி, மறைத்து - வீதியின் இயங்குவாரைத் தடுத்து, அணிமுத்து உமிழ் வீதி அடுக்குந - ஆங்கு அழகுறுத்தப்பட்ட முத்தமாலைகள் ஒளிவீசுதலையுடைய அவ்வீதிகளை எய்திக் கிடந்தன, (எ - று.) | |
| (பாடம்) 1. மணிமுற்ற. 2. துழவி. | | |
|
|