பக்கம் : 689 | | துவர்வாயிளையார் சிந்திய முத்தணிகள் செறிந்து, வீதியின் வாய்ச் செல்வோரைத் தடுத்துக் கிடந்தன, என்க. | ( 251 ) | மணமுரசு அறைதல் | 1078. | துகிலார் கொடிபொங் கினதொங் கனிமிர்ந் தகிலார் புகையா வியடுத் 1தமையாற் பகலா னொடுவந் திரவும் பகலே யிகலா துடனா கியியைந் துளவே. | (இ - ள்.) துகில் ஆர் கொடி பொங்கின - துகில் பொருந்திய கொடிகள் நெருங்கினவற்றோடு, தொங்கல் நிமிர்ந்து - தொங்கல்கள் நெருங்கி, அகில் ஆர் புகை ஆவி அடுத்தமையால் - அகில் பொருந்திய மணப்புகையாகிய ஆவியும் கலந்ததனாலே, பகலானொடு - கதிரவனோடு, பகலே இரவும் வந்து - பகற்போதிலேயே இராப்போதும் ஒருங்கே வந்து, இகலாது - ஒன்றோடொன்று மாறுபடுதலின்றி, உடனாய் இயைந்துள - ஒன்றாகிக் கலந்திருந்தன, (எ - று.) துகிலாலாய கொடிகளும், தொங்கல்களும், செறிய அகிற்புகையும் கலந்து, அப்பகலிலே இரவையும் வரச் செய்தன, என்க. | ( 252 ) | | 1079. | பலர்மன் னியபா டலுமா டலுமே வலமன் னிமயங் கிமுயங் குதலால் நிலமன் னவருந் நெடுமால் வரைமேற் குலமன் னவருந் குளிர்தூங் கினரே. | (இ - ள்.) பலர் மன்னிய பாடலும் ஆடலுமே - கூத்தரும் பாணரும் பலர்கூடி இயற்றிய இசையுடனும் கூத்துடனும், வலம் மன்னி மயங்கி முயங்குதலால் - வலமாக வருதலைப் பொருந்திக் கலத்தலால், நிலமன்னரும் - பயாபதி முதலிய நிலமாள் வேந்தரும், நெடுமால் வரைமேல் குலமன்னவரும் - நீண்ட பெரிய இமயமலைமேல் வாழ்பவராகிய உயர்குல வேந்தராகிய சடி முதலியோரும், குளிர் தூங்கினர் - அக்கலையின்பங்களை நுகர்ந்து மகிழ்ந்தார்கள், (எ - று.) கூத்தர், பாணர் முதலியோரியற்றிய, ஆடல்பாடல்களைக் கண்டும், கேட்டும் அரசரெல்லாம் மகிழ்ந்தனர், என்க. | ( 253 ) |
| (பாடம்) 1. யடுத்துமையால். | | |
|
|