பக்கம் : 690 | | | 1080. | அகல்வா னிடையங் கிழிவா னவரும் முகிலா றிழிவிஞ் சையரும் 1முடுகிப் பகலா னொடுதா ரைபரத் தனபோற் புகலா 2லொளிபோந் ததுபொன் னகரே. | (இ - ள்.) அகல்வானிடை அங்கிழி வானவரும் - அகன்ற விசும்பினின்றும் அவ்விடத்தே இறங்கிய அமரரும், முகில் ஆறு இழி விஞ்சையரும் - முகில் இயங்கும் மேகமண்டலத்தினின்றும் இறங்கிய விச்சாதரரும், முடுகி - நெருங்கி, பகலானொடு - கதிரவனோடு, தாரை பரந்தனபோல் - உடுக்கள் கலந்தாற் போல, புகலால் - புகுதலாலே, பொன்னகர் ஒளி போந்தது - அழகிய போதனமாநகரத்தின் கண்ணே ஒளிபுக்கு நிறைந்தது, (எ - று.) தாரை - தாரகை. இயற்கையிலேயே உடல் ஒளிபடைத்த வானவரும் விஞ்சையரும் வான்வழி வருதலால் ஞாயிறோடே தாரகைகள் கலந்தாற் போன்று அந்நகர் ஒளிமிக்கது. | ( 254 ) | | 1081. | வடமே ருமுகட் டலரும் மலரும் புடமே ரு3 பொலிந் தலரும் மலருந் தடமே 4லுளபொன் னவிழ்தா மரையுந் 5திடமே வியவிஞ் சையர்சிந் தினரே. | (இ - ள்.) வடமேரு முகட்டு அலரும் மலரும் - மேருமலையின் கொடுமுடிகளிலே மலர்ந்த மலர்களையும், புடமேரு பொலிந்தலரும் மலரும் - பக்கமலைகளிலே அழகுற்று மலர்ந்த மலர்களையும், தடமேலுள பொன் அவிழ் தாமரையும் - குளங்களிலே மலர்தலையுடைய அழகு விரிகின்ற தாமரை மலர்களையும், திடம் மேவிய - வலிமை பொருந்திய, விஞ்சையர் சிந்தினரே - விச்சாதரர்கள் பொழிந்தனர், (எ - று.) விச்சாதரர், தாம் வாழும் மேருவில் மலர்கின்ற தெய்வமலர்களையும், வேறுபல மலைகளிலும் மலர்ந்த மலர்களையும், பொற்றாமரை மலர்களையும், சிந்தினர் என்க. | ( 255 ) | | 1082. | அணிவேண் டினர்கொள் ளவடுத் தனவு மணிவேண் டினர்கொள் ள6வகுத் தனவுங் கணிவேண் டினநாள் கழியுந் துணையும் பணிவேண் டினர்வீ திபரந் தனவே. | | |
| (பாடம்) 1. விரவிப். 2. ரொளி. 3. கலத். 4. ருள. 5. மடமேவினர். 6. வுகுத். | | |
|
|