சுழிகின்றது (யாதெனில்) - சுழிகின்றது அப்பொன் மழையுள், தொல்சன வெள்ளமே - அப்பொன் மழையினூடே திரண்ட மக்கள் வெள்ளமே, அதற்கு ஒழிகின்றது - அந்நகர்க்கு இயலாது ஒழிகின்ற சிறப்பியாதெனில், அது நாம் உரையாததுவே - அது எம்மால் கூறாமல்எஞ்சியதே யாகும், (எ - று.) இழிகின்றனர் - இழிவுடையோர் - இறங்குபவர். பொழிதல் - சிதறுதல் - துன்பமுதலியவற்றார் சிதறுபவர் இல்லை என்றபடி, சுழிதல் - வருந்துதல், சுற்றுதல். ஒழிகின்றது - ஒழிகின்ற மாண்பு, யாம் கூறாமையால் அங்கில்லை என்றபடி. (இ - ள்.) எத்திசையும் - எல்லாத் திசைகளிலும், விஞ்சையர் - விச்சாதரர்கள், இழிகின்றனர் - வந்து இறங்குவாராயினர், எத்திசையும் - எல்லாத் திசைகளிலேயும், பொன்மழை - பொன்மாரி, பொழிகின்றது - பெய்யாநின்றது, அம்மழையுள் - அப் பொன் மழையின் ஊடே, சுழிகின்றது தொல்சன வெள்ளம் - சுழித்துத் தேங்கியது பழைய மக்கட் கூட்டம், அதற்கு - அந்நகரத்திற்கு, ஒழிகின்றது - பொருந்தாமல் ஒழிவது யாதெனில், யாம் உரையாதது - எம்மால் கூறப்படாமையால் ஒழிந்த மாண்பே, (எ - று.) இங்ஙனம் பொருள் கூறினும் பொருந்தும். |
(இ - ள்.) தூமரைமுகத்து அரசர் பலர்சென்று - தூய தாமரைபோலும் மலர்ந்த முகங்களையுடைய மன்னர் பலர் சென்று, தாமரை முகத் தமனியக்குடம் அவற்றால் - தாமரை மலர்போன்ற வாயையுடைய பொன்னாலியன்ற குடங்களால், மரைப்பூ முகத்து எறிதிரைப் புனல் முகந்து - தாமரைப் பூக்களைத தம்பாலுடைய அலையெறியும் கடவுட்புனலை முகந்து கொண்டு, சாமரை முகத்தன மதக்களிறு தம்மேல் - சாமரைகளால் அணியப்பட்ட முகத்தையுடைய யானைகளின் மேற்கொண்டு சூழ்ந்தார் - வந்து மொய்த்தனர், (எ - று.) மன்னர் தமனியக் குடத்தால் கடவுட்புனல் முகந்துகொண்டு முகமகிழ்ச்சியுடனே, களிறுகள் மேலேற்றிக் கொணர்ந்தவர் சூழ்ந்தார், என்க. |