பக்கம் : 693
 

 

1086.

வண்டுபடு மாலையர்ம டப்பிடிக டம்மேன்
1மண்டயலு ழைக்கலம ழைக்கண்மட வார்க
ளெண்டிசையு 2மெங்குமிட மின்றிமிடை வுற்றார்
கண்டவரை மேல்விரவு கார்மயிலொ டொத்தார்.
 

     (இ - ள்.) வண்டுபடு மாலையர் - வண்டுகள் மொய்க்கின்ற மலர்மாலையை
யணிந்தவராய், மண்டு மழைக்கண் உழைக்கல மடவார்கள் - செல்லாநின்ற குளிர்ந்த
கண்களையுடைய உழைக்கல மகளிர்கள், மடப்பிடிகள் தம்மேல் - இளைய பெண்
யானைகளின் மேல் ஏறி, எண்டிசையும் எங்கும் - எட்டுத்திசைகளினும் யாண்டும், அயல்
இடம் இன்றி - வேறு இடமில்லாதபடி, மிடைவுற்றார் - நெருங்கினவர்கள், கண்ட வரைமேல்
விரவு கார்மயிலோடு ஒத்தார் - காணப்பட்ட மலைகளின் மேல் மேவிய நீல மயில்களின்
கூட்டத்தைப் போன்று காணப்பட்டனர், (எ - று.)

உழைக்கல மகளிர்கள் மாயைணிந்து பிடிகளிலே வந்தோர், மலைமேலே விரவும்
நீலமயில்களை ஒத்தார் என்க. கார் மயில் - கார் காலத்தே களிப்புற்ற மயிலுமாம். மலைக்கு
மடப்பிடியும் மகளிர்க்கு மயிலும் உவமை.
 

( 260 )

 

1087.

மாளிகைநி ரைத்தமணி மாடநகர் முன்னா
லாளியர சேந்துமணி 3யாசனம தன்மேற்
காளைகழல் வேந்தர்பலர் சூழ்தரவி ருந்தா
னாளொடுபொ லிந்தநகை மாமதிய மொத்தான்.
 

     (இ - ள்.) காளை - திவிட்டநம்பி, மாளிகை நிரைத்த மணி மாடம் நகர்முன்னால் -
மாளிகைகள் மிக்கு நிரைந்துள்ளதும் மணிகள் இழைத்த மேனிலைமாடங்களை யுடையதும்
ஆகிய அரண்மனையின் முன்மண்டபத்தே, ஆளி யரசு ஏந்தும் மணி ஆசனமதன் மேல் -
அரசரிமாவால் சுமக்கப்பட்ட மணிகள் பதித்த அணையின்மேலே, கழல் வேந்தர் பலர்
சூழ்தர - வீரக்கழலணிந்த அரசர்பலர் தன்னைச் சூழும்படி, இருந்தான் - இருந்தவன்,
நாளொடு பொலிந்த நகை மா மதியம் ஒத்தான் - விண்மீன்கள் தன்னைச் சூழாநிற்ப
அவற்றிடையே அழகுற்றுத் திகழ்கின்ற முழுவெண்டிங்களை ஒத்திருந்தான், (எ - று.)

திவிட்டநம்பி மண்டபத்தே வேந்தர் பலர் சூழ அரியணை மேலிருந்தவன், வானத்தே
உடுத்திரளோடே பொலிவுற்ற திங்கள் மண்டிலத்தை ஒத்தான் என்க..
 

( 261 )

     (பாடம்) 1. கொண்டயலு. 2. மேரு. 3. யாசனத்து மேலாற்