பக்கம் : 694 | | | 1088. | அங்கணயி ராவணமி ரண்டுடனெ டுத்த மங்கலம ணிக்கலச நீர்சொரிய வாடிப் பொங்குதிரை 1யொன்றிருபு 2யற்பொலிய வேந்தித் தங்கு 3புனல் பெய்ததட மால்வரையொ டொத்தான். | (இ - ள்.) அங்கண் அயிராவணம் இரண்டு உடன் எடுத்த - அழகிய கண்களையுடைய யானைகளிரண்டு ஒருசேர எடுத்த, மணிக்கலச மங்கலர நீர் சொரிய - மணிகள் பதிக்கப்பட்ட குடங்களின் நிறைந்த கடவுட்டன்மை யுடைய நீரைப் பொழியாநிற்ப, ஆடி - மங்கல நீராடுதலைச் செய்து, இருபுயல் - இரண்டு முகில்கள், பொங்கு திரை ஒன்று - மிக்க அலைகளையுடைய கடலின்கட் சேர்ந்து, தங்குபுனல் பொலிய ஏந்தி - அங்குத் தங்குதலையுடைய நீரை அழகுறச் சுமந்து கொணர்ந்து, பெய்த தடமால்வரை ஒத்தான் - பொழியப்பட்ட பெரிய மலையை ஒத்துத் தோன்றினான், (எ - று,) அயிராவணம் - ஒரு கடவுளியானை - அக்கடவுளியானையை ஒத்த யானைகள் என்றபடி, அயிராவணம் அனைய, இரண்டு யானைகள் ஒருசேர மணிக்கலச நீரைச் சொரிய ஆடிய நம்பி, இரண்டு மேகங்கள், கடல் முகந்து தன் உச்சியில் ஒருசேரச் சொரியப் பெற்ற, பெரிய மலையை ஒத்தான் என்க. | ( 262 ) | | 1089. | மன்னர்கள்சொ ரிந்தமணி நீரருவி யாடிப் பின்னைமலர் மாரியகல் வானினவர் பெய்ய மின்னவிர்வி ளங்குசுடர் வேல்விடலை 4மெய்யிற் பொன்னணிபு னைந்துபுது வேள்விநகர் புக்கான். | (இ - ள்.) மன்னர்கள் சொரிந்த மணி நீர் அருவியாடி - அரசர்கள் பொழிந்த நீலமணி போற் றெளிந்த நீர் அருவியில் குளித்துப், பின் அகல்வானினவர் மலர் மாரி பெய்ய - பின்பு விரிந்த விசும்பில் வாழும் அமரர்கள் மலர்மழை பொழியா நிற்ப, மின் அவிர் விளங்குசுடர் வேல்விடலை - மின்னலைப் போன்று ஒளிர்ந்து விளங்குகின்ற சுடரையுடைய வேல் ஏந்தும் திவிட்டநம்பி, மெய்யில் பொன்அணி புனைந்து - தனது திருமேனியில் பொன்னாலியன்ற அணிகலன் ஆடை முதலியவற்றை அணிந்துகொண்டு, புது வேள்விநகர் புக்கான் - புதியதாக இயற்றப்பட்ட திருமண வேள்விமன்றத்தை எய்தினான், நம்பி, மன்னர்கள் சொரிந்த மங்கல நீராடி, வானவர் மலர் மாரி பெய்ய, பொன்னணி புனைந்து, மணமண்டபம் புக்கான், என்க. | ( 263 ) |
| (பாடம்) 1. யொன்றிரண்டு. 2. மேகருடனேந்தி. 3. புயல். 4. யாடிப். | | |
|
|