(இ - ள்.) நங்கை மணவேள்பி நகல் எய்துவதன் முன்னர் - சுயம்பிரபை திருமண வேள்விமன்றத்தை அடைவதன் முன்னரே, பொங்கு புரிநூல் அனலர் - மிக்க புரிநூல் பூண்ட தீயோம்பாளர்கள், தாமரை புனைந்து ஆர் மங்கல உழைக்கலம் நிரைத்த மண மாடம் - தாமரை மலர் வடிவிற்றாக இயற்றிப் பொருந்திய மணமங்கல வினைக்கியன்ற உழைக்கலம் பிறவும் நிரலாக வைக்கப்பட்ட மண மன்றமாகிய, அது புகுந்து - அதன்கட் சென்று, அங்கு தழல் வளர்க்கிய அமைந்தார் - அவ்விடத்தே வேள்வித் தீயை வளர்ப்பதற்கு அமைந்தனர், (எ - று.) தாமரை மலர்மாலையை அணிந்துகொண்டு எனினுமாம். தீயோம்பாளர் நங்கை எய்துமுன்னம், மங்கலக்கலம் பரப்பிய மணமாடத்தே, தாமரை வடிவிற்றாய குண்டமிட்டுத் தழல் வளர்ப்பாராயினர், என்க. |
(இ - ள்.) ஆய்ந்த மறை ஓதி அதன் ஆரிடம் அறிந்தான் - சான்றோரான் ஆராயப்படட நான்கு மறைகளையும் நன்கு ஓதி அம்மறையகத்தவாகிய இருடி வாசகங்களையும் நன்கு அறிந்தவனாகிய வேள்வியாசான், சாந்து மெழுகிட்ட தடமாமணி நிலத்தைச் சேர்ந்து - முன்னரே நறுமணச் சாந்தால் நன்கு மெழுகப்பட்டு விரிந்துள்ள சிறந்த மணிகள் பதித்த தரையை எய்தி, பொன்னியல் சலாகை நுதி தீட்டி - பொன்னாலியன்றதொரு கோலினது கூர்நுனியால் கோடுகள் வரைந்து காட்டி, பேர்ந்தும் ஒருகால் விரைபெருக்கி மெழுகிட்டான் - மீண்டும் ஒருமுறை மணப்பொருள் கூட்டிய சாந்தாலே அவ்வரைந்து காட்டிய இடத்தை மெழுகும்படி செய்தான், (எ - று.) |