பக்கம் : 699
 

     நான்முகனுக்குரிய வலத்ததாகிய நல்லிடம் என்க. காவல் - காப்பு மந்திரம் (ஓதி
என்க) பயின்ற: பெயர். பருதிக்கடிகை. வேள்வித் தீ. சமிதை - வேள்விவிறகு. தொழுதி -
தொகுதி.
 

( 271 )

கணி முழுத்த வருகை யுணர்த்தல்

1098.

ஆயிடைந 1டுக்கட லுளானமர ராசா
னேயுடைய னாயசுர மந்திரியெ ழுந்தான்
போயுடைவி சும்பின்மதி 2யும்புகுது கின்றான்
மேயுடைய ணிந்தகணி வேலையிது வென்றான்.
 

     (இ - ள்.) ஆயிடை - அப்பொழுது, நடுக்கடல் உளான் - நடுவணதாகிய
கடலையுடையவனாகிய வருணனும், அமரர் ஆசான் - வியாழனும், ஏயுடையன் ஆய்
அசுரமந்திரி - தன்னோடு நட்புடையனாகிய வெள்ளி, எழுந்துபோய் - பெயர்ந்துபோய்.
உடை விசும்பின் - தனக்குரியதாகிய விசும்பிடத்தே, மதியம் புகுதுகின்றான் - திங்களோடு
சேராநின்றான் ஆதலால், மே யுடைஅணிந்த கணி - சிறப்புடை உடுத்த கணிவன், வேலை
இது என்றான் - மணவேள்வி நிகழ்தற்குதிய முழுத்தம் இஃதென்று வேள்வியாசானுக்
குணர்த்தினான், (எ - று.)

கடலுளான் - வருணன், அமரர் ஆசான் - வியாழன். அசுர மந்திரி - வெள்ளி. மதியம் -
திங்கள். மேயுடை - சிறப்புடை. வேலை - முழுத்தம்.
 

( 272 )

சடிமன்னன் நீர்வாக்கி யளித்தல்

1099.

அங்குமுன் வளர்த்தவழ லேகடவு ளாக
மங்கையைம ணக்குழுவின் முன்னைவரை வேந்தன்
கொங்குவிரி தாரவற்கு நீரொடுகொ டுத்தா
னங்கையொடு நாண்மலரு ளாளையும டுத்தான்.
 

     (இ - ள்.) அங்கு முன் வளர்த்த அழலே கடவுளாக - அத்திருமண வேள்வி
மன்றத்தே முன்னர் ஆசானால் வளர்க்கப்பட்ட தீயே இறைவனாக, மங்கையை
மணக்குழவின் முன்னை - சுயம்பிரபையைத் திருமணங் காண்பாராகிய அக்கூட்டத்தின்
முன்னிலையிலே, வரைவேந்தன் - சடியரசன், கொங்குவிரி தார் அவற்கு - மணங்கமழும்
மாலையணிந்த திவிட்டநம்பிக்கு, நீரொடு கொடுத்தான் - நீர்வாக்கி ஈந்தான்; இவ்வாற்றால்,
நங்கையொடு -

 

     (பாடம்) 1. கடமுளான். 2. யோனும் புகுது.