(இ - ள்.) ஆயிடை - அப்பொழுது, நடுக்கடல் உளான் - நடுவணதாகிய கடலையுடையவனாகிய வருணனும், அமரர் ஆசான் - வியாழனும், ஏயுடையன் ஆய் அசுரமந்திரி - தன்னோடு நட்புடையனாகிய வெள்ளி, எழுந்துபோய் - பெயர்ந்துபோய். உடை விசும்பின் - தனக்குரியதாகிய விசும்பிடத்தே, மதியம் புகுதுகின்றான் - திங்களோடு சேராநின்றான் ஆதலால், மே யுடைஅணிந்த கணி - சிறப்புடை உடுத்த கணிவன், வேலை இது என்றான் - மணவேள்வி நிகழ்தற்குதிய முழுத்தம் இஃதென்று வேள்வியாசானுக் குணர்த்தினான், (எ - று.) கடலுளான் - வருணன், அமரர் ஆசான் - வியாழன். அசுர மந்திரி - வெள்ளி. மதியம் - திங்கள். மேயுடை - சிறப்புடை. வேலை - முழுத்தம். |
(இ - ள்.) அங்கு முன் வளர்த்த அழலே கடவுளாக - அத்திருமண வேள்வி மன்றத்தே முன்னர் ஆசானால் வளர்க்கப்பட்ட தீயே இறைவனாக, மங்கையை மணக்குழவின் முன்னை - சுயம்பிரபையைத் திருமணங் காண்பாராகிய அக்கூட்டத்தின் முன்னிலையிலே, வரைவேந்தன் - சடியரசன், கொங்குவிரி தார் அவற்கு - மணங்கமழும் மாலையணிந்த திவிட்டநம்பிக்கு, நீரொடு கொடுத்தான் - நீர்வாக்கி ஈந்தான்; இவ்வாற்றால், நங்கையொடு - |