இது விசயனைக் கண்டு மயங்கினா ளொருத்தி கூற்றென்க. இவள் பேதைமை:- ... ... ... “நெஞ்சிடை வஞ்சன் வந்து புக்கனன் போகாவண்ணம் கண்ணெனும் புலங்கொள்வாயில் சிக்கென அடைத்தேன் தோழி“ (கம்ப. உலா. 14) என்று கூறிய மிதிலை நகரத்தாள் பேதைமையைப் போன்றது. வளைவண்ணன் - விசயன். வார் - நீர். |
( 13 ) |
மங்கையர் மாட்சி |
83. | கண்ணிலாங் கவினொளிக் காளை மார்திறத் துண்ணிலா வெழுதரு காம வூழெரி எண்ணிலாச் சுடர்சுட விரிந்து நாண்விடாப் 1பெண்ணலாற் பிறிதுயிர் பெரிய தில்லையே. |
(இ - ள்.) கண்நிலாம் கவின் ஒளிக் காளைமார் திறத்து - காண்போர் கண்ணில் நின்றுநிலவும் அழகொளியையுடைய இளைஞர்களாகிய விசயதிவிட்டர் பொருளாக; உள்நிலாம் எழுதரு காம ஊழ் எரி - தம் உள்ளத்தே தோன்றி எழுகின்ற காதலாகிய ஊழித் தீயானது; எண்இலாச் சுடர் சுட விரிந்தும் - கணக்கற்ற சுடர்களைக்கொண்டு சுடுமாறு பரவியெழுந்தும்; நாண் விடா - வெட்கத்தினை விடாத; பெண்ணலால் உயிர் பெரியது - இப்பெண் களின் உயிரினும் சிறந்த உயிர்; பிறிது இல்லை - மற்றொன்றில்லை. (எ - று.) விசய திவிட்டர்களிடத்திலே மங்கையர்க்கு உண்டாகிய காமத்தீயானது மிகுதியாகப் பரவியெழுந்தும் அம்மங்கையர்கள் தங்கட்குரிய நாணத்தினை விடாமலே உயிரினைத் தாங்கியிருக்கின்றனர். இதனால் அம்மங்கையரது மனத்திண்மையுங் கற்புநலமும் எளிதிற் புலனாம். |
( 14 ) |
இதனைக் “கடலன்ன காம முழந்து மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில்“ (குறள். - 1137) எனவரும் திருக்குறளோடு ஒப்பு நோக்குக. |
|
(பாடம்) 1. பெண்ணிலாம் பிறதுயர். |