பக்கம் : 700
 

     சுயம்பிரபையுடனே, நான்மலர் உளாளையும் - புதிய தாமரை மலரிடத்தே வதியும்
திருமகளையும் திவிட்டன் ஒருவேர மணந்தவன் ஆயினான், (எ-று.)

சுயம்பிரபை - திருமகளும் ஆதலால் இங்ஙனம் கூறினர். இல்லவன் மாண்புடையளாய
போது அவனுக்கு எத்திருவும் உடனெய்துமாகலின் மாண்புடைய சுயம்பிரபையை
எய்தியபொழுதே திருமகளும் வலிந்து வந்து புணர்ந்தனள் எனினும் ஆம்.
 

( 273 )

நம்பியும் நங்கையும் மணத்தவிசில் வீற்றிருத்தல்

1100.

மன்னியழல் வேள்வியி லவற்குவல மாகப்
பின்னிய 1தருப்பைகள் பிடித்தவை விடுத்தாங்
கன்னமனை யாளொடயில் வேலவனி ருந்தான்
கன்னியொடி யைந்தகதிர் மாமதிய மொத்தான்.
 

     (இ - ள்,) அழல் வேள்வியில் மன்னி அவற்கு வலமாக - தீயையுடைய
மணவேள்விக்கண் நிலைபெற்றுத் திவிட்டநம்பிக்கு வலப்பாகத்தே, பின்னிய தருப்பைகள்
பிடித்து அவை விடுத்து - பிணைக்கப்பட்ட தருப்பை பிடித்துச் செய்வதாய தொழில்களைச்
செய்து பின்னர் அத்தொழிலையும் விட்டு, ஆங்கு அன்னம் அனையாளொடு -
அவ்விடத்தே அன்னம்போன்ற சுயம்பிரபையுடனே, அயல் வேலவன் இருந்தான் -
அயிலாகிய வேற்படையையுடைய திவிட்டநம்பி வீற்றிருக் கின்றவன், கன்னியொடு இயைந்த
கதிர் மாமதியம் ஒத்தான் - சித்திரை நாளொடு வீற்றிருந்த ஒளியுடைய முழுத்திங்களை
ஒத்திருந்தான், (எ - று.)

வலமாகப் பின்னிய தருப்பை எனினுமாம். கன்னியோடியைந்த கதிர்மதி என்றது சித்திரைப்
பருவத்திங்களை. அழல் வேள்விச் செயல் முற்றி நங்கை யோடிருந்த நம்பி, சித்திரை
நாளொடு இருந்த திங்களை ஒத்தான், என்க. அத்திங்கள் மிகுந்த ஒளியுடைத்தாயிருக்கும்
என்ப. இதனை “காப்யபிக்யா தயோராஸீத் வ்ரஜதோ: சுத்த வேஷயோ: ஹிம நிர்முக்தயோர்
யோகே சித்ராசந்த்ரம ஸோரிவ' எனவரும் ரகுவம்சத்தாலும் உணர்க. (1-46)
 

( 274 )

 

1101.

கந்துளுமி 2ழுங்கரிய சூழ்புகைகள் விம்ம
வந்துசுட ரேந்திவல னேசுழல மாட்டி
யந்தணனு மங்கழ லமைத்துமிக வேட்டான்
மைந்தனும டந்தையைம னத்தின்மிக வேட்டான்.
 

     (இ - ள்.) கந்துள் உமிழும் கரிய சூழ்புகைகள் விம்ம - கரியை உமிழ்கின்ற
கரியவாய்ச் சூழ்தலையுடைய வேள்விப் புகைகள் பெருகவும், சுடர் வந்து ஏந்தி வலனே
சுழல மாட்டி - வேள்வித்தீ மிக்கு ஓங்கி

 

     (பாடம்) 1. தருப்பையள். 2. ழற் கரிய.