சுயம்பிரபையோடே, கடிபடு நெடிய மாடம் - காவலமைந்த நீண்ட மேனிலை மாடத்தின் கண்ணே, ஏறினான் - ஏறாநின்றான், (அவன் யாரெனில்) முடிவு கொள் உலகம் எய்தும் - வினைமுடிவின்கண் எய்தற் பாலதாய வீட்டுலகத்தை எய்திய, இன்ப மாமூர்த்தி ஒத்தான் - இன்பவடிவத்தையுடைய பெருமைமிக்க அருக பரமேட்டியையே ஒத்தவனாகிய திவிட்டன் என்பான், (எ - று.) கேவலஞானம் என்னும் மடந்தையோடு வீட்டிற்புகும் உயிரை, இன்பமா மூர்த்தி என்றார் எனினும் ஆம். |
(இ - ள்.) கழுமிய - செறிந்த, காகதுண்டம் - அகிற்புகை, கமழ் தொறும் - மணமுடைத்தாய்ச்சூழுந்தொறும், காளமேகம் குழுமியதனைய மாடக் குவட்டிடை - கரிய மேகங்கள் கூடியதைப் போன்ற மேனிலை மாடத்தின் உச்சியின்கண் அமைந்த அமளி சேர்வார் - அணையிடத்தே எய்துபவர்களாகிய, விழுமலர்ப் பிணையன்னாளும் - சிறந்த மலர்மாலையையுடைய மான் பிணை போன்ற சுயம்பிரபையும், விடலையும் திவிட்டநம்பியும், நேருநெற்றி (செழுமணிச்சிலை சென்று ஏறும் - மேருமலையுச்சியிலுள்ள செழிப்புடைய மணிகள் குவட்டிலே ஏறுதலையுடைய, தெய்வ மாமிதுனம் ஒத்தார் - மிதுன தேவர்களை ஒத்தனர், (எ - று.) தெய்வ மிதுனம் - ஆணும் பெண்ணுமாய் இணைபிரியாதிருக்கும் ஒருவகைத் தேவர். அகிற்புகை சூழ்தலாலே முகில் சூழும் மலையை ஒக்குமொரு மேனிலைமாடத்தே ஏறுகின்ற நங்கை நம்பியர், மேருவிலே ஏறும் மிதுனதேவரை ஒத்தார், என்க. விஞ்சையர் மிதுனத்தேவர் என்றார் முன்னும் (150). |