பக்கம் : 705 | | (இ - ள்.) பொன்னியல் கொடியின் ஒல்கி - பொன்னாலியன்ற பூங்கொடியைப் போன்று துவண்டு, பூவணை பொருந்தும் பாவை - மலரணையிலே பொருந்திய சுயம்பிரபையின், கன்னி நாண் ஏற்றம் இதுகாறும் அழிதலைப்பெறாத நாண் என்னும் அப் பெண்மையின் மிகுதிப்பாட்டை, காளை - திவிட்டன், கண்களி கொள்ள நோக்கி - தன் கண்கள் பேரின்பமெய்துமாறு கூர்ந்து நோக்கியிருந்து, பின் அவள் ஒடுங்க வாங்கி - பின்னர் அவள் மேலும் நாணத்தாலே ஒடுங்கிப் போம்படி தன் கைகளாலே எடுத்து, பெருவரை அகலம் சேர்த்தி - பெரிய மலைபோன்ற தனது மார்பகத்தே அணைத்து, இன்னகை மழலை கேட்பான் - அவளுடைய இனிய முறுவலோடு கூடிய மழலைச் சொற்களைக் கேட்டற்கு விழைந்து, என்கொல் இம்மிகை நாண் என்றான் - என் அன்பே! இத்தகைய மிகையாய நாணத்தை நீ எய்துதற்கு ஏது என்னை? என்று வினவினான், (எ - று.) நாணினானிகழ்ந்த மெய்ப்பாடுகளை ஒற்றுமை கருதி நாண் என்றார். நம்பி, பாவை நாண் ஏற்றம் நோக்கி, பின் அவள் ஒடுங்கவாங்கி, சேர்த்தி, மழலை கேட்பான், இம்மிகை நாண் ஏன்? என்றான் என்க. | ( 284 ) | கல்வி | 1111. | நின்றநா 1ணெனுநீள் கன்னிச் சிறைவிண்டு காளை திண்டோட் குன்றினாற் செறிக்கப் பட்ட குமரிநீ ரமிர்த யாறு சென்றுதேன் பகர்ந்து செம்பொற் கலஞ்சிந்தித் திளைத்து விம்மி அன்றவ னார்வ வெள்ளக் கடலிடை யழுந்திற் றன்றே. | (இ - ள்.) காளை திண் தோள் குன்றினால் செறிக்கப்பட்ட - திவிட்டனுடைய திண்ணிய தோள்கள் என்னும் மலைகளாலேதேக்கப்பட்ட, குமரி நீர் அமிர்தயாறு - இளமையினது நீர்மையாகின்ற காதல் என்னும் அமிழ்தப் பேரியாறு, நின்ற நாண் எனும் நீள் கன்னிச் சிறை விண்டு - அதுகாறும் ஓராற்றானும் அழியாது நிலைத்துநின்ற நாணம் என்னும் நீண்ட கன்னிமைத் தன்மையாகிய அணையைப் பிளந்து, சென்று தேன் பகர்ந்து செம்பொன் கலம் சிந்த - ஓடித் தேன்போன்று ஒலித்து செவ்விய பொன்னணிகலன்களைத் சிதறி, திளைத்து விம்மி - அளைந்து பெருகி, அன்று - அந்த நாளிலே, அவன் - அத் திவிட்டநம்பியின், ஆர்வ வெள்ளக் கடலிடை - வேணவா வென்னும் வெள்ளமிக்க காதற் கடலகத்தே, அழுந்திற்று அன்றே - கலந்தொன்றாயது, அன்றே : அசை, (எ - று.) | |
| (பாடம்) 1. ணென்னும். | | |
|
|