பக்கம் : 706 | | குமரி நீர்மையாகிய அமிழ்தப் பேரியாறு, நாண் என்னும் அணையுடைத்து, திண்டோள் ஆகிய குன்றத்தாலே தேங்கி, கலம் சிந்தி, திளைத்து விம்பி, நம்பியின் காதற் கடலிலே கலந்தொன்றாயது, என்க. இதன்கண் இருவகைப் புணர்ச்சியும் கூறப்பட்டன. | ( 285 ) | நம்பியும் நங்கையும் மணத்தவிசில் வீற்றிருத்தல் | 1112. | பருவத்தா லரும்பிப் போதாய்ப் பையவே யலர்ந்து முற்றி 1மருவித்தேங் கனிகொண் டுள்ளான் மனங்கொள 2வழிந்த கா திருவொத்த களியின் றீஞ்சா றாரவுண் டார மாட்டார் [மத் உருவத்தா லிருவ ராகி யுள்ளத்தா லொருவ ரானார். | (இ - ள்.) பருவத்தால் அரும்பி - அரும்புதற்குரிய இளம் பருவத்தானே அரும்பி, போதாய் - மொட்டாகி, பையவே அலர்ந்து - பின்னர்ப் பைய மலர்ந்து, முற்றி - முதிர்ந்து, தேம் மருவி - இனிமை பொருந்தி, கனிகொண்டு - கனிந்து, உள்ளால் மனங்கொள வழிந்த - அகத்தூடே இருவர் மனங்களும் கொண்டு நிறைவதாக வழிந்துள்ள, திருவொத்த - செல்வத்தை நிகர்த்த, காமக் களியின் தீஞ்சாறு காழில் காமக் கனியினது பிழியாகிய இனிய தீவிய சாற்றை, ஆரவுண்டு ஆரமாட்டார் - தம்முள்ளம் நிறைய உண்டும் பின்னும் நிறைவுற மாட்டாதவராய், உருவத்தால் இருவராகி - உடம்பு மாத்திரையே இருவராகி, உள்ளத்தால் ஒருவரானார் - உள்ளத்தானே இரண்டறக் கலந்து ஒன்றுபட்டார், (எ - று.) அரும்பிப் போதாய், அலர்ந்து, முற்றித் தேன் கனிந்து, உள்ளால் வழிந்த காமக் கனியின் தீஞ்சாறு, உண்டு ஆரமாட்டாராய், உடலாலிருவராய், உளத்தால் ஒருவரே ஆயினர், என்க. | ( 286 ) | | 1113. | உலவிய வலங்கன் மாலை 3யொளிர்மல ருடைய மார்பிற் குலவிய மணிமுத் 4தோடுங் குவிமுலைக் குவடு பாயக் கலவியுங் களிப்புங் காமப் புலவியுங் கலந்து சால நிலவிய மதுவுண் டார்போ னெஞ்சுண மயங்கி யிட்டார். | (இ - ள்.) உலவிய அலங்கன்மாலை ஒளிர் மலருடைய மார்பில் - அசைந்தாடுதலையுடைய மாலையகத்தே திகழும் மலர்களையுடைய திவிட்டனுடைய மார்பகத்தே, குலவிய மணிமுத்தோடும் - பொருந்திய முத்தமணி மாலையோடும், குவிமுலைக் குவடு பாய - சுயம்பிரபையின் குவிந்த முலைகளின் கண்கள் மோதும்படி, கலவியும் - புணர்ச்சியும், களிப்பும் - புணர்ச்சிவயின மகிழ்தலும், புலவியும் - ஊடலும், கலந்து - | |
| (பாடம்) 1. மருவித்தான். 2. வளிந்த. 3. யொளிமல. 4. தேறும். | | |
|
|