பக்கம் : 707
 

     பொருந்தி, சால - மிகவும், நிலவிய மதுவுண்டார்போல் - வெறி நிலவுதலையுடைய
கள்ளருந்தினவர்களைப் போன்று, காமம் நெஞ்சுண - காமவின்பம் தம் உள்ளத்தை
விழுங்கிவிட, மயங்கியிட்டார் - அவ்வின்பத்தே மயங்கிக் கிடந்தார், (எ - று.)

மார்பில் குவிமுலைக் குவடுபாய, கலவியும், களிப்பும் புலவியும் கலந்து நிறைய,
மதுவுண்டார்போல் மயங்கினர் என்க.
 

( 287 )

நம்பியும் நங்கையும் மணத்தவிசில் வீற்றிருத்தல்

1114.

அடிக்கலந் திருத்தி யம்மென் புரிகுழற் சுருளை நீவி
முடிக்கல ரணிந்து காதன் முகிழ்நகை முகிழ்ப்பப் புல்லிக்
1கடைக்கணி யாய காளை கவான்மிசை 2யிருத்திக் காமர்
குடிக்கணி யாய கொம்பு கேட்கமற் றிதனைச் சொன்னான்.
 

     (இ - ள்.) அடிக்கலம் திருத்தி - சுயம்பிரபையின் அடிகளிலே அணிந்துள்ள பாடகம்
முதலிய அணிகலன்களைத் தன் கைகளாலே திருத்தி, அம் மெல் புரிகுழற் சுருளை நீவி -
அழகிய மெல்லிய முருக்குடைய அளகச் சுருளைத் தடவி, முடிக்கு அலர் அணிந்து -
தலையிலே மலர் சூட்டி, காதல் முகிழ் நகை முகிழ்ப்பப் புல்லி - காதலின்பத்தாலே அவள்
நுண்ணிதின் மகிழத்தழீஇ, கவான் மிசை யிருத்தி - தனது தொடையிலே பொருந்த
வைத்துக்கொண்டு, கடைக் கணியாய காளை - அவளைத் தன் கடைக்கண்ணாலே
பார்க்கின்றவனாகிய திவிட்டன், குடிக்கு அணியாய - பிறந்ததும் புக்கதுமாகிய
இருமுதுகுடிக்கும் நன்கலமாகிய, காமர் கொம்பு கேட்க - அழகிய பூங்கொம்பை ஒத்த
சுயம்பிரபை இனிது கேட்குமாறு, இதனைச் சொன்னான் - பின்வரும் நலம்
பாராட்டுரைகளை நவில்வானாயினான். மற்று: அசை, ( )

நம்பி நங்கையின் பாடகம் முதலியதிருத்தி, நீவி, அணிந்து, புல்லி, கடைக்கணித்துப்
பார்த்துக், கவான் மிசை யிருத்திக், கேட்கச் சொன்னான் என்க. கடிக்கணியாய காளை
என்றும் பாடம்; இதற்குத் திருமணத்திற்கு ஓர் அணியாகவுள்ள திவிட்டன் என்க. நேரிற்
பார்த்தால் நாணுதலின், பாராதவனைப் போன்று கடைக்கணாற் பார்த்தான் என்க.
 

( 288 )

திவிட்டன் நங்கையின் நலம் பாராட்டல்

1115.

செங்குவளை நாறுந் திருமேனி செவ்வாயும்
அங்குவளை யீரிதழு மாம்பலுமே நாறுமால்
இங்கிவளை முன்படைத்த தேவனென் னின்னுயிரைப்
பைங்குவளை 3மாலையாட் காளாய்ப் படைத்தானே.
 

    

 

     (பாடம்) 1. கடிக்கணி. 2. யிருக்க. 3. மாலையார்க்.