பக்கம் : 710
 

     பாவைக்கு - பாவைபோன்ற இவள் திறத்து, ஓர் ஆளே ஆகின்றேன் - ஒரு கணவன்
என்னும் மாத்திரையே ஆகின்றேன், ( )

நங்கை எனக்கு அமிர்தம் முதலிய எல்லாம் ஆக யானோ ஒரு கணவனே ஆகின்றேன்
என்றான் என்க. இஃது ஊடலுணர்த்தக் கூறியது என்க. அவளை இன்றியமைந்து
வாழமாட்டாத யானும், அவட்கு அமிர்த முதலியன போல்வே னாயின் அவள் என்னோடு
பேசுவாள் அன்றோ என்றவாறு.
 

( 292 )

இதுவுமது

1119.

செம்பவழ மேய்ப்பத் திகழ்ந்திலங்கு சீறடியின்
வம்பழகு நோக்கி வழிபடுவ தேசாலும்
அம்பவழ வாயு மளகஞ்சேர் வாணுதலும்
1எம்பவமோ நுங்கயா மெம்மை யறியேமே.
 

     (இ - ள்) செம்பவழம் ஏய்ப்பத் திகழ்ந்து இலங்கு சீறடியின் - சிவந்த பவழம் போன்று
திகழ்ந்து விளங்கும் இவள் சிற்றடிகளின், வம்பு அழகு நோக்கி - பார்க்குந்தொறும் புதுமை
நல்கும் அழகினை மட்டுமே இடையறாது நோக்கி, வழிபடுவதே சாலும் - அவையிற்றை
வழிபடுதல் ஒன்றே எமக்குப் போதியதாகும், மேலும், அம்பவழவாயும் - அழகிய பவழத்தை
ஒத்த திருவாய் மலரின் அழகையும், அளகம் சேர் வாள் நுதலும் - கூந்தல் புரளும்
ஒளிமிக்க நெற்றியின் அழகையும், நுங்க - முழு முற்றும் நுகர்தற்கோ எனில், எம்பவமோ
எம்மை அறியேம் - எம்முடைய இம்மானிடப் பிறப்போ அதற்கேற்ற தவமுடைத்து
உடையதாகாமையின் யாம் எம்மை மதிக்கின்றேமில்லை, (எ - று.)

அவன் பேசாமையின், மேலும் கூறுவான் அடியின் அழகே நோக்கி நோக்கி இன்புற
எமக்குப் போதியதாம், அவளோடு அளவளாவுதற்கு யாம் தவம் உடையேம் அல்லேம்
என்றான் என்க. இத்தகைய மொழியையே “பன்மாயக் கள்வன் பணிமொழிÓ என்று குறளுட்
கூறியதென்க.
 

( 293 )

இதுவுமது

1120.

வண்டே மடந்தை மணியைம்பான் 2மேவியிருந்
துண்டே யெனநுடங்கு 3முண்மருங்கு 4நோவியீர்
தண்டேன்கா ணீருந் தளிர்மேனி நாற்றத்தாற்
பண்டேபோல் வந்து பயிலாது போமினே.
 

    

 

     (பாடம்) 1. எம்பரவ மோந்து நுகரயா. 2. மேலிருந். 3. நுண். 4. நேரவியேல்.