பக்கம் : 711
 

     (இ - ள்.) வண்டே - வண்டுகளே நீவிர், மடந்தை - சுயம்பிரபையின், மணி
யைம்பால் மேவி யிருந்து - நீலமணி போலும் நிறமமைந்த அளகத்தின் மிசை ஏறி இருந்து,
உன் உண்டே என நுடங்கும் மருங்குல் - அல்குற்கும் முலைகட்கும் இடையே உளதாதல்
வேண்டும் என்று கருதல் அளவையாற் கூறப்படும் ஒல்குதலையுடைய இடையை, நோவியீர்
- வருத்தாதொழிமின், தண் தேன்தாள் - குளிர்ந்த தேன் இனங்காள், நீரும் - நீவிரும்,
தளிர் மேனி நாற்றத்தால் - இவளுடைய மாந்தளிர் போன்ற திருமேனியின் நறுமணத்தை
விரும்பி, பண்டே போல் - முன்காலத்தே போன்று, வந்துபயிலாது போமின் - வந்து
மொய்த்திடாது அகலப்போமின், (எ - று).

பண்டன்று பட்டினம் காப்பு என்றாற்போன்று இன்று அவள் திருமேனி எம்
காவற்கண்ணதாகலின், பண்டுபோல் வந்து பயிலேன் மின் என்றான் என்க. வண்டுகாள் !
இவள் இடை நுண்ணிதாகலின், ஐம்பான் மேவி, அதனை இழக்குமாறு செய்யேன்மின்,
தேன்காள் இவள் மேனி நாற்றம் நுகர்வான் யானுளன், மணமாகாத பண்டுபோல் எண்ணி
அந்நறுநாற்றத்தை விரும்பி வந்து பயிலேன்மின் என்றான் என்க.
 

( 294 )

தன்னெஞ்சிற் குரைத்தல்

1121.

கள்ள மடநோக்கி தன்னைக் கரந்தென
துள்ளத்தின் வைப்பி னுருவமது காணேன்
மெள்ளவென் றோளணைவா ளென்னும் விருப்பாரா
தெள்ளு மனத்தினுக் கெய்திற் றறியேனே.
 

     (இ - ள்.) கள்ளம் மடநோக்கி - கள்ளநோக்கும் மட நோக்கும் உடைய இவள்,
தன்னைக் கரந்தெனது உள்ளத்தின் வைப்பின் - தனது உருவத்தை என் நெஞ்சத்தின்கண்
மறைத்து வைத்தாள் எனில், அது காணேன் - அவ்வுருவத்தை யான் காணாதொழிந்தேன்,
தன்கண் இவள் இருப்பவேயும் அஃதறியாது, மெள்ள என்தோள் அணைவாள் - மெல்ல
வந்து என் தோள்களிலே பொருந்துவாள், என்னும் - என்றெழுகின்ற தன், விருப்புஆரா -
விருப்பத்தை இந்நெஞ்சம் ஒழிக்கின்றிலது, எள்ளும் என் மனத்தினுக்கு எய்திற்று அறியேன்
- எள்ளத் தகுந்த என் நெஞ்சுக்கு இயன்றதொரு பேதைமை இத்தன்மைத்தென்று யான்
அறிகின்றேனில்லை,
(எ - று.)

நங்கை தன் நெஞ்சத்தின் கண்ணளாகவும் அதுமேலும் அவளை அணைய விழைந்து
தன்னை அலைத்தற்குரிய பேதைமைத் தன்மையை என்னென்பது என்றான், என்க. இஃது
ஊடல் உணர்த்துவான் தன் னெஞ்சிற்குக் கூறியது,

( 295 )