பக்கம் : 712
 

 

1122.

காதலால் வந்தென் கவான்மே லிருப்பினும்
ஏதிலாள் போலு மிமைப்பி னிமையாதே
போதுலாம் வாண்முகமே நோக்கிப் 1பொலிவேனென்
மாதரா ணாணும்யான் வாழுமா றோரேனே.
 

     (இ - ள்.) காதலால் வந்து என் கவான்மேல் இருப்பினும் - இவள் என்பால் நிறைந்த
காதலுடையாளாய் எம்பால் வந்து எமது தொடைமேல் அமர்ந்து இருப்பாளாகவும்,
இமைப்பின் ஏதிலாள்போலும் - இவளழகைப் பருகும் என் கண்களைச் சிறிது
இமைத்துப்பின் நோக்குவேனாயின், அத்துணைக்கே இவள் அயலிடத்தவள் போன்று
ஆகிவிடுகின்றாள்
, ஆற்றாமை மிகுவதாம், இமையாதே போதுலாம் வாண்முகமே நோக்கிப் பொலிவேன் -
அங்ஙனமாதல் பொறாமல் இவள் தன் ஒளிமிக்க முகத்தை இமையாதே பார்த்துப்
பொலிவுடையேன் ஆவேன் எனிலோ, என் மாதராள் - என் காதற்கினிய இம்மடந்தை,
நாணும் - அங்ஙனம் யாநோக்குதற்கு இவள் பெரிதும் நாணாநின்றாள், இவ்வாறாகலின்,
யான் வாழுமாறு ஓரேன் - இமைக்கவும் இயலாது இமையாதே நோக்கவும் இயலாமையின்
இவ்விரு நிலையும் விட்டு யான் இனிது வாழும் ஒரு நிலையை உணர்கின்றேனில்லை, (எ -
று.)

இவளழகை நோக்குங்கால், இடையே இமைத்து நோக்குதலும், எனக்கு ஆற்றாமை
உண்டாக்கும்; அதற்கஞ்சி, இமையாது நோக்கின் இவள் நாணா நின்றாள்; இமையாதும்,
இமைத்தும், இருக்கின்ற இந்நிலையிரண்டினும் வேறாய நிலையும் அறிகின்றிலேன்; யான்
என்செய்கோ ! என்றான், என்க.
 

( 296 )

 

1123.

உலம்பா ராட்2டுந் தோளவ ணொண்பூங் குழலாளை
நலம்பா 3ராட்டி நாகிள முல்லை நகுவிக்கும்
வலம்பா ராட்டி வந்ததொர் மாரிப் புயலொத்தான்
குலம்பா ராட்டுங் கொம்புமொர் முல்லைக் கொடியொத்தாள்.
 

     (இ - ள்.) உலம் பாராட்டும் தோளவன் - திரள்கல்லை ஒக்கும் என்று புகழப்படும்
தோள்களையுடைய திவிட்டநம்பி, ஒண்பூங்குழலாளை - ஒளியுடைய மலர்சூட்டப்பட்ட
குழலையுடைய சுயம்பிரபையை, நலம் பாராட்டி - இங்ஙனமாக நலங்களைப் பலபடப்
புகழ்ந்துகூறி, நாகிளமுல்லை நகுவிக்கும் - மிக்க இளமையை யுடைய முல்லையை
மலர்விக்கும், வலம் பாராட்டி வந்ததோர் - வலம் ஏறி வந்ததாகிய ஒப்பற்ற, மாரிப்
புயல்ஒத்தான் - கார்ப் பருவத்து மேகத்தை நிகர்த்தான், குலம் பாராட்டும் கொம்பும் - தன்
 

 

     (பாடம்) 1. யிருப்பேனென், யிருப்பேனேல். 2. டந். 3. ராட்டு.