பக்கம் : 714
 

 

1125.

தண்டா ரீன்று செந்தளி ரேந்தித் தழல்பூத்த
வண்டார் பிண்டி வார்தளிர் நீழன் மணிவட்டங்
கண்டாங் கேறிக் காரிகை யோடு விளையாடிப்
பண்டான் கொண்ட பாவையர் பாட லிசைகேட்டான்.
 

     (இ - ள்.) தண்டார் ஈன்று - குளிர்ந்த மலர் மாலைகளைப் போன்று பூத்து; செந்தளிர்
ஏந்தி - சிவந்த தளிர்களைத் தாங்கி, தழல்பூத்த - நெருப்புப் பிழம்பைப் போன்று
மலர்ந்துள்ள, வண்டுஆர்பிண்டி - வண்டுகள் மொய்க்கின்ற அசோகமரத்தின், வார் தளிர்
நீழல் - நீண்ட தளிர்களானாய நிழலின்கண் அமைந்த, மணிவட்டம் கண்டு -
மணிகளாலியன்ற வட்டவடிவிற்றாய மேடை ஒன்றைக் கண்டு, காரிகையோடு ஆங்குஏறி -
சுயம்பிரபையோடே அம்மேடைமிசை ஏறி, விளையாடி - ஆடி, பண்தான்கொண்ட
பாவையர் பாடல் இசை கேட்டான் - பண் அமைந்த மகளிர்களின் இசைப்பாடலைக்
கேட்டின்புற்றான், (எ - று.)

தார் ஈன்று - மாலைதொடுத்தாற் போன்று மலர்களை ஈன்று என்றவாறு. அங்ஙனம் பூம்
பொழிலிலே புக்கவன், பிண்டி நீழலிலே மணிவட்டங்கண்டு, அதன் மிசையேறி
நங்கையோடே ஆடிப் பாவையர் பாடலிசையை நுகர்ந்தான்; என்க.
 

( 299 )

மகளிர் பாட்டு
இது முதல் 3 செய்யுள்கள் ஒரு தொடர்

1126.

வரைவேந்தன் மடமகளை மணியேர்மேனி நிறங்கொண்டு
விரையேந்து தளிரீனல் 1விழையாய்வாழி தேமாவே
விரையேந்து தளிரீனில் 2வேனிற்றென்ற லலர்தூற்ற
நிரையேந்து வடுநீயே படுதிவாழி தேமாவே.

     (இ - ள்.) தேமாவே - தேமாமரமே; வரைவேந்தன் மடமகளை - சுவலனசடி
மன்னனுடைய மடமிக்க மகளாகிய சுயம்பிரபையினுடைய, மணியேர் மேனி நிறங்கொண்டு -
மாணிக்கத்தைப் போன்ற அழகிய திருமேனியின் நிறத்தை ஒப்பாகக் கொண்டு, விரையேந்து
தளிர்ஈனல் விழையாய் - மணம்பொருந்திய தளிரை ஈனுதலை விரும்பாதே கொள்,
விரையேந்து தளிர் ஈனில் - மணம் பொருந்திய தளிரை ஈனுவாயாயின், தேமாவே -
தேமாமரமே கேள், நீயே - நீதான், வேனில்தென்றல் அலர்தூற்ற நிரையேந்து வடுப்படுதி -
இளவேனிற் பருவத்துத் தென்றல் உன்னுடைய பழியை உலகில் தூற்றாநிற்ப நிரலாக மிகுந்த
அம்மாறாப்பழியை அடைவாய், வாழி : முன்னிலையசை. (எ - று.)

சுயம்பிரபையின் நிறத்தைப் போன்ற தளிர் ஈனக்கருதி நீ தளிர்ப்பாய் எனினும் அத்தளிர்கள்
அவள் நிறத்தை ஒவ்வா ஆகலின் இப்பழியைத்
 

 

     (பாடம்) 1. உறுதி. 2. வேனிற்றேனல் லானூற்ற.