தென்றல் உலகிற்றூற்றும், அதனால் நினக்கு வசையேயுண்டாம் என்றபடி. இனி, வேனிற்றென்றலில் தேமா மலர்தலின் தென்றல் மலரை மலர்விக்கும் என்றும், அதனால் நீ வடுவுண்டாவை என்றும் வேறு பொருள்படுதல் காண்க. வடு - மாம்பிஞ்சு. அலர் தூற்றல் - பூக்களைச் சிதறுதல். மேல் வரும் செய்யுள் இரண்டினும் இவ்வாறே இருபொருள் காண்க. |
( 300 ) |
|
1127. | அடிமருங்கி னரசிறைஞ்ச வாழியாள்வான் பெருந்தேவி கொடிமருங்கி னெழில்கொண்டு1கு ழையல்வாழி குருக்கத்தி கொடிமருங்கி னெழில்கொண்டு குழைவாயாயிற் பலர்பறிப்பக் கடிமருங்கிற் புக்கலரே காண்டிவாழி குருக்கத்தி. |
(இ - ள்.) குருக்கத்தி - குருக்கத்திக் கொடியே; அடிமருங்கின் அரசு இறைஞ்ச - தன் அடிகளிலே மன்னர்கள் வணங்கா நிற்ப, ஆழிஆள்வான் பெருந்தேவி - ஆழிப்படையை ஆளுதலுடைய திவிட்டநம்பியின் கோப்பெருந்தேவியாகிய சுயம்பிரபையின், கொடிமருங்கின் எழில்கொண்டு குழையல் - கொடிபோன்ற நுண்ணிடையின் அழகை ஒப்பாகக்கொண்டு ஒல்காதே கொள், கொடிமருங்கின் எழில் கொண்டு குழைவாய் ஆயில் - கொடிபோன்ற நுண்ணிடையின் அழகை ஒப்பாகக் கொண்டு ஒல்கு வாயெனில், குருக்கத்தி - குருக்கத்திக்கொடியே!, கடிமருங்கிற்புக்குப் பலர் பறிப்ப - மணமிக்க உன் பக்கத்தே புகுந்து பலரானும் பறிக்கப்பட்டு, அலரே காண்டி - அவ்வழி நீ பழியுண்டாதலையே காண்பாய். வாழி : அசை, (எ - று.) குருக்கத்தி: அண்மைவிளி. அடாது செய்தாயென உன்பொருளைப் பலர் பறிப்ப என்க. அலர் - பழி. மலரைப் பலர் பறிக்கப்படுவாய் என்றொரு பொருள் காண்க. |
( 301 ) |
|
1128. | வணங்கி வையந் தொழ2நின்ற மன்னன் காதன் மடமகள்போன் மணங்க ணாறும் பூம்பாவை வளரல்வாழி நறுங்குரவே மணங்க ணாறும் பூம்பாவை வளர்த்தி யாயி லிளையா ராற் கணங்க ளோடு பறிப்புண்டி கண்டாய் வாழி நறுங்குரவே. |
(இ - ள்.) நறுங்குரவே - நறிய குராமரமே !, வையம் வணங்கித் தொழநின்ற மன்னன் காதல் மடமகள் போல் - உலகெலாம் வணங்கித் தொழும்படி சிறப்புற்று நின்ற சடிமன்னனுடைய அன்புக்குரிய மடமிக்க மகளாகிய சுயம்பிரபையை ஒப்பாகக்கொண்டு, மணங்கள் நாறும் பூம்பாவை |
|
|
(பாடம்) 1. குழைவாயாயிற் குமரியாய். 2. நின்று. |