பக்கம் : 723
 

     புடைத்தான், மற்று அப் பரூஉத்திரள் வயிரத் தம்பம் - அந்தப் பருத்துத் திரண்ட
வயிரத்தூண், அசனி வீழ அருவரை நெரிவதே போல் - இடியேறு தாக்கிற்றாக அரிய
மலை தகர்ந்து வீழ்வதைப்போன்று, படித்தலை நடுங்க - பூமி நடுங்கும்படி, தொடித்தலை
சிதைந்து நுங்க - பூண்கட்டிய தன் தலை தகர்ந்து உதிர, துகள் எழுந்து ஒழிந்தது அன்றே
- துகளாகப் பறந்து ஒழிந்தது, அன்றே: அசை, (எ - று.)

     சினங்கொண்ட அச்சுவகண்டன் அயனின்ற ஒரு தூணைத் தன் கையால் அறைய,
அவ் வயிரத்தூண் நுறுங்கித் துகளாயதென்க.
 

( 9 )

 
1140. விஞ்சைய ரதனைக் கண்டு மெய்பொதி ரெறிந்து விம்ம
வெஞ்சினங் கனன்று மீட்டும் விஞ்சைய யவனை நோக்கி
வஞ்சனை மனத்த ராய மனிச 1ரை வலிய ரென்பாய்
அஞ்சினை பெரிது மேடா வென்றன 2னசனி யொப்பான்.
 
     (இ - ள்.) விஞ்சையர் அதனைக் கண்டு - அங்குள்ள விச்சாதரர்கள் அச்சினச்
செயலைக்கண்டு, மெய் பொதிர் எறிந்து விம்ம - உடல் நடுங்கி அச்சத்தாலே மனம்
விம்மாநிற்ப, விஞ்சையன் மீட்டும் வெஞ்சினம் கனன்று - அச்சுவகண்டன் மீளவும்
வெகுளியால் மனம்கனன்று, அவனை நோக்கி - அவ்வரிகேது என்பானைப் பார்த்து,
அசனி ஒப்பான் - இடியேற்றை ஒத்து முழங்குவானாய் ஏடா - அடே அரிகேது!,
அஞ்சினை பெரிதும் - நீ மனிசரைப் பெரிதும் அஞ்சிவிட்டாய் போலும், வஞ்சனை
மனத்தராய மனிசரை வலியர் என்பாய் என்றான் - ஆதலானன்றோ, வஞ்சனை
மனமுடையரான எளிய மானிடரை மிக்க வலிமையுடையோர் என்று புகழாநின்றனை, என்று
கூறினான், (எ - று.)

     பின்னர், அச்சுவகண்டன் அரிகேதுவை விளித்து, ஏடா! நீ மனிசரை மிக அஞ்சினை!
ஆகலானன்றே “மானிடர் வலியரென்றாய்Óஎன்றான், என்க. இச்செயலை அரியது என்று
அரிகேது கூறலின் அச்சொல்லின் கருத்தாகிய மனிதர் வலியுடையர் - திவிட்டன்
வலிமையுடையன் - என்பதை அச்சுவகண்டன் நெஞ்சிற்கொண்டு இவ்வாறு கூறுகின்றான்
என்பது கருத்து.
 

( 10 )

 

1141. நிலத்திடை மக்க ளாற்ற னின்னைப்போ லஞ்சு வார்க்கு
மலைத்துணை பெருகிக் காட்டு மற்றதிங் கெம்ம னோர்க்கோர்
இலைத்தது மில்லை 3மன்னோ வென்றன் னிரண்டு திங்கள்
பிலத்திடை பொடித்த போலும் பிறழ்ந்திலங் கெயிற்றி னானே.
 

     (பாடம்) 1மனிசனை வலிய னென்பாய். 2சைனியொ டொப்பான. 3மன்னா. 5வன்றே.