சினம் பொங்கிற்றாகக் கண்ணுள் நெருப்புப் பிறந்தது; உடல் வியர்த்தது; சினத்தீயால் உருகினவனைப்போல் ஆயினன்; உதட்டை மடித்துக் கடித்தான்; எல்லோரும் நடுங்கும்படி நோக்கி நக்கு நின்றான் என்க. |
( 17 ) |
|
1148. | மலைகளை மறித்து மற்றோர் மறிகட னடுவ ணிட்டவ் வலைதிரை மகர முந்நீ ரதுவிது வாக்கு வேன்கொல் உலகினை யுள்ளங் கைக்கொண் டுருளையா வுருட்டி 1யிட்டென் பலபுனை மடந்தை தன்கீழ்ப் பதித்திடு 2வேன்கொ லென்றான். |
(இ - ள்.) மலைகளை மற்றோர் மறிகடல் நடுவண் இட்டு - மலைகளை வேறொரு கடலின் நடுவே வாரிப்போட்டு, மறித்து - மீண்டும், அலைதிரை மகரமுந்நீரது இது ஆக்குவேன் கொல் - எறிகின்ற அலைகளையுடையதும் மகரமீன்களையுடையதுமாகிய கடலை இம்மலையிடத்ததாக மாற்றி அமைப்பேனோ, உலகினை உள்ளங்கைக் கொண்டு - இவ்வுலகத்தை எனது அங்கையிலே எடுத்து, உருளையா வுருட்டியிட்டு - உருளையைப் போன்று உருட்டிவிட்டு, என் பலபுனை மடந்தை கீழ்ப்படுத்திடுவேன் கொல் - என்னுடைய பல சிறப்புக்களையும் அணிகலனாகப் பூண்டுள்ள புகழ்மடந்தையின் அடியின்கீழ் அடங்குமாறு செய்வேனோ, என்றான் - என்று கூறினான், (எ - று.) பலபுனை மடந்தை என்றது புகழ் மடந்தையை, அச்சுவகண்டன், மலைகளைக் கடலிற் புரட்டுவேனோ? கடல்களை மேடாக்குவேனோ? உலகினை உருட்டுவேனோ? என்றான், என்க. இத்தகைய செயல்களைச் செய்தாலன்றித் தன் சினத்தை ஆற்றிக் கொள்ள வியலாதென்றபடி. |
( 18 ) |
|
1149. | அனன்றனன் றவைகள் பேசி யமையுமவ் வரசர் தீமை மனங்கொளப் படுவ தாயின் மணிவரை யுலகின் வாழுஞ் சனங்களைத் திரட்டிப் பின்னைத் தக்கதொன் றறிவ னென்றான் சினங்கெழு காலன் மற்றோர் காலன்மேற் 3சிவந்த தொப்பான். |
(இ - ள்.) சினங்கெழு காலன் - வெகுளி பொருந்திய மறலி, மற்றோர் காலன்மேல் சிவந்தது ஒப்பான் - வேறேயொரு மறலியின்மேல் வெகுண்டதை ஒப்பவனாகிய அச்சுவகண்டன், அனன்று அனன்று அவைகள் |
|
|
(பாடம்) 3 யீட்டென். 2 வன்கொ. 3 சினந்த. |