பக்கம் : 729
 

     பேசி - சினந்து சினந்து அத்தகைய மொழிகளைப் பேசி, அமையும் - அமைவதாக,
அவ்வரசர் தீமை மனங்கொளப்படுவதாயின் - அவ்வேந்தர்கள் நமக்கியற்றியுள்ள தீங்குகள்
நம்மால் பொருளாகக்கொள்ளப்படுவன ஆனால், மணிவரை யுலகின் வாழும் -
இவ்விரத்தின பல்லவம் என்னும் மலையுலகிலே வாழுகின்ற, சனங்களைத் திரட்டி -
மக்களை ஒருங்கே கூட்டிவைத்து, பின்னைத் தக்கது ஒன்று அறிவன் என்றான் - பின்னர்
அவ்வேந்தர்க்கு மாறாகச் செய்யத்தகுந்ததொன்றை ஆராய்ந்து காண்பன் என்றான், (எ -
று.)

என்கோற் கீழ்வாழ்வாரை ஒருங்கே கூட்டி, அவருடன் ஆராய்ந்து, என் பகைவர் செய்த
தீமைக்குத் தக்க மாறு காண்பல் என்றான், என்க.
 

( 19 )

படை எழுச்ச

1150. சிறந்தெரி யனலோ டொப்பான்
     பணிகொண்டு திசைக ளோடி
அறைந்தனர் முரசிற் சாற்றி
     யறைதலு ரெல்லா
மறைந்தன வுலக மென்ன
     மாய்ந்தன திசைக ளென்னப்
பறந்தனர் விசும்பு 1போர்ப்பக்
     கடற்படை பரப்பி வந்தார்.
 
     (இ - ள்.) சிறந்து எரி அனலோடு ஒப்பான் - மிக்கெரிகின்ற தீயை ஒத்து
வெகுள்வானாகிய அச்சுவகண்டனுடைய, பணிகொண்டு - ஏவலை மேற்கொண்டு, திசைகள்
ஓடி - திசைகள்தோறும் விரைந்துசென்று முரசிற்சாற்றி அறைந்தனர் - முரசுமுழக்கிக்
கூறினார், கூறலும் - அங்ஙனம் பணியாளர் கூறினவுடன், அரைசர் எல்லாம் -
அம்மணிவரை உலகம் ஆளும் மன்னர் எல்லாம், கடற்படை பரப்பி - கடல்போன்ற தத்தம்
பெரும்படைகளைப் பரப்பி, உலகம் மறைந்தன என்ன - உலகங்கள் இப்படையால்
மறைக்கப்பட்டன என்று கூறுமாறும், திசைகள் மாய்ந்தன - திக்குகள் ஒழிந்துபோயின,
என்ன - என்று கூறுமாறும், விசும்புபோர்ப்ப பறந்தனர்-விண்ணை மறைத்துப் பறந்து,
வந்தார் - வருவாராயினர், (எ - று.)

பறந்தனர்: முற்றெச்சம்.

தீயை ஒப்பானாகிய அச்சுவகண்டன் பணியோடே, பணிமாக்கள் முரசிற் சாற்றி
அறைந்தவுடனே, அரசரெல்லாம், மறைந்தன என்ன, மாய்ந்தன என்ன, மாய்ந்தன என்ன
விசும்பு போர்ப்பக் கடற்படை பரப்பி பறந்து வந்தனர், என்க.
விஞ்சையராகலின் பறந்து வந்தனர் என்க.
 

( 20 )


     (பாடம்) 1பொற்பசு.