உடற் பாதுகாப்பாளர்கள் |
87. | மன்னவன் றுயில்விடுத் தருள மைந்தர்பொன் றுன்னிய வுடையினர் துதைந்த கச்சையர் பின்னிய ஞாணினர் பிடித்த வில்லினர் அன்னவ ரடிமுதற் 1காவ னண்ணினார். |
(இ - ள்.) மன்னவன் - பயாபதி யரசனானவன்; துயில் விடுத்து அருள - உறக்கம் நீங்கியருளவும்; பொன்துன்னிய உடையினர் - பொன்னால் வேலைப்பாடுகள் செய்யப்பெற்ற உடுப்புக்களை யணிந்தவர்களும்; துதைந்த கச்சையர் - அழுத்தமாகக் கட்டப்பெற்ற கச்சையை உடையவர்களும்; பின்னிய ஞாணினர் - பின்னப்பட்ட அரைஞாண் அணிந்தவர்களும்; பிடித்த வில்லினர் - கையிலே பிடிக்கப்பெற்ற வில்லையுடையவர்களும் ஆகிய; மைந்தர் - அரசனுடைய உடற்பாதுகாப்பாளர்கள்; அன்னவன் அடிமுதல் - அரசனுடைய அடிகளினிடத்திலே நின்று; காவல் நண்ணினார் - காத்தல் தொழிலைச் செய்யலானார்கள். (எ - று.) பயாபதி மன்னன் உறக்கம் நீங்கினான். மெய்காப்பாளர்கள் தங்கட்குரிய உடுப்புக்களை உடுத்திக் கையில் வில்லைப் பிடித்தவர்களாய் அரசன் அண்மையில் நின்று அரசனுக்கு எத்தகைய ஊறுபாடும் நேராதபடி பாதுகாக்கத் தொடங்கினார்கள். துயில் விடுத்தருள - என்பதற்கு உறக்கத்தை யொழித்தருளும் அளவும் என்று பொருளுரைத்து, அரசன் உறங்கியபோதும் மெய்காப்பாளர்கள் காவல் புரிந்ததாக உரை கூறினாரும் உளர். |
( 18 ) |
திருப்பள்ளி எழுச்சி |
88. | தங்கிய தவழொளி தடாவி வில்லிட மங்கல வுழைக்கல மருங்கு 2சேர்ந்தன அங்கவன் கண்கழூஉ வருளிச் 3செய்தனன் பங்கய 4முகத்தர்பல் லாண்டு கூறினார். |
(இ - ள்.) தங்கிய - பொருந்திய; தவழ்ஒளி - பேரொளி; தடாவி வில்இட - மருங்குகளிற் பொருந்தி ஒளியைச் செய்யுமாறு; மங்கலம் உழைக்கலம் - மலர பொன் மணி கண்ணாடி முதலிய மங்கலப் பொருள்கள்; மருங்கு சேர்ந்தன - அரசனுடைய படுக்கைக்கு அருகிற் சேர்க்கப்பெற்றன; |
|
(பாடம்) 1. கரவ. 2. சேந்தன. 3. செய்த நன். 4. முகத்தவர். |