(இ - ள்.) ஊழி பெயர்க்கலுற்று - இவ்வூழிக் காலத்தை மாற்ற எண்ணி, இவ்வுலகினைப் பிறிதொன்றாக்கி - இவ்வுலகத்தை வேறோர் உலகாக மாற்றி, வாழ்உயிர் ஒருங்கு வாரி - இதன்கண் வாழும் உயிர்களை ஒருசேர அள்ளி, மறிகடல் நடுவண் பெய்வான் - அலைபுரளும் கடலிடைய தள்ளும் பொருட்டு, சூழிய - சூழ்ச்சிசெய்ய, தொடங்குகின்றது ஆங்கொலோ - தொடங்கும் ஒரு செயலாகுமோ, சொல்லின் - ஆராய்ந்து கூறுமிடத்தே, ஆழியான் - ஆழிப்படையையுடைய அச்சுவகண்டனுடைய, வெகுளிக்கு, ஈடு உண்டோ - சினத்திற்கு இலக்கு உண்டோ?, ஆர் இரையாவது - இதற்கு இரையாவது யார்கொலோ?, என்பார் - என்று இரங்கா நிற்பர், (எ - று.) ஈடு - இலக்கு. வார் - நேர்மை. அச்சுவகண்டன் நிகழ்கின்ற ஊழியை மாற்றி உலகினை மாற்றியமைக்கக் கருதி, அதன் பொருட்டு உயிாக்ளைக் கடலிற் பெய்து அழிக்கும் கருத்தால், இவ்வாறு சினங்கொண்டனனோ! அன்றெனில், இவன் சினத்திற்கு இலக்கு உலகில் இல்லையே! இதற்கு இரையாகுவார் யாரோ? என்றார் என்க. |
(இ - ள்.) தானவர் அரக்கர் பண்டே இவர்க்குத் தஞ்சம் -விச்சாதரர்களும் அரக்கர்களும் பண்டைக்காலத்தேயே இவன்பால் தஞ்சம்புக்கோர், மண்மேல் ஊனவர் மனித்தர் ஏக - மண்ணிடை வாழும் ஊன்பயில் உடலுடை மானிடர் இவனுக்குப் பொருளலர் ஆதலால் அவர் கிடக்க, வானவர் உவனுக்கோர் துகளும் ஆகார் - தேவர்கள் இவனுக்கு ஒரு துகளும் ஆகமாட்டார், இவற்கு மாறாய் வருபவர் - எனவே இவ்வச்சுவகண்டனுக்குப் பகையாய் வரும் ஆற்றலுடையார், மதிப்பின் இல்லை - ஆராய்ந்து காணுமிடத்தே ஒருவரும் இல்லை, முனிவு செய்வார் ஏனவர் பிறர் யார் - இவனால் வெகுளத் தக்கார் பிறர் யாரே உளர், உரைமின் என்பார் - கூறுங்கோள் என்று வினவுவார்கள், (எ - று.) |