பக்கம் : 734
 

     அச்சத்தால் உலகம் இன்றே அழியும் என்பாரும், நச்சுத்தன்மையுடைய சினச்
சிரிப்பாலே திசைகள் நடுங்கின என்பாரும் ஆகித் தத்தம் மனம்போன வழி அவ்வரசர்
நினையா நிற்ப, அச்சுவகண்டன் கனன்று பின்வருமாறு கூறினான், என்க.
 

( 27 )

 

1158. இரதநூ புரத்தை யாள்வான்
     புதல்வியை 1யுனைவஞ் சித்துப்
2புரிமனு சர்க்கீ வாக்கே
     புகன்றனன் போலு மென்ற
உரைதனக் குரைத்த வாறே
     யுரைத்தன னுலக மெல்லாம்
இரைதனக் கென்று மாற்றா
     வெரிபடு வெகுளித் தீயான்.
 
     (இ - ள்.) இரத நூபுரத்தை ஆள்வான் - இரதநூபுரச் சக்கிரவாளத்தை ஆட்சி
செய்கின்ற சடிமன்னன், உனை வஞ்சித்து - உன்னை வஞ்சனை செய்து, புதல்வியை - தன்
மகளாகிய சுயம்பிரபையை, புரிமனுசர்க்கு ஈவாக்கே புகன்றனன் - விழைவுடைய
மானிடர்க்குக் கொடுப்பேன் என்னும் சொல்லையே கூறினன், என்ற - என்று ஒற்றரால்
தனக்குக் கூறப்பட்ட, உரை - மொழியையே, தனக்கு உரைத்தவாறே உரைத்தனன் -
தனக்கு ஒற்றர்கள் உரைத்தபடியே எடுத்து மொழிந்தான், உலகம் எல்லாம் - எல்லா
உலகமும் ஒருங்கே திரண்டும், என்றும் - ஒருபொழுதேனும், தனக்கு இரை ஆற்றா -
தனக்கு இரையாகுதற்குப் போதியவாகா, எரிபடு வெகுளித்தீயான் - பற்றி எரிதலையுடைய
சின நெருப்புடையனாகிய அச்சுவகண்டன். ( )

இரத நூபுர,,,,,, போலும் என்னுமளவும் ஒற்றர் கூற்றை அச்சுவ கண்டன் கொண்டு
கூறியபடியாம். சினமிகுதியால் அவ்வொற்றர்கூற்றைப் பன்முறையும் திருப்பித் திருப்பிக்
கூறினான் என்க.
 

( 28 )

 

1159. முரைசொலி முழையி னுள்ளான்
     முழங்குகின் றதனோ டொப்ப
விரையொலி விளங்கு தாரான்
     விளம்பிய வெகுளி மாற்றம்
அரைசர்க 3ளாங்குக் கேட்டா
     ரடிகண்மற் றிதற்கோ விவ்வா
றுரைசெல முனிவ தென்றோ
     ரொல்லொலி யெழுந்த தன்றே.
     

 


     (பாடம்) 1எனைவஞ்சித்து. 2புரிமனுசர்க்கீவாகே யிவா கனன்றன. 3ளிதனைக் கேட்டே யிதனுக்கோ வடிகளிவ்வா.