பக்கம் : 734 | | அச்சத்தால் உலகம் இன்றே அழியும் என்பாரும், நச்சுத்தன்மையுடைய சினச் சிரிப்பாலே திசைகள் நடுங்கின என்பாரும் ஆகித் தத்தம் மனம்போன வழி அவ்வரசர் நினையா நிற்ப, அச்சுவகண்டன் கனன்று பின்வருமாறு கூறினான், என்க. | ( 27 ) | | 1158. | இரதநூ புரத்தை யாள்வான் புதல்வியை 1யுனைவஞ் சித்துப் 2புரிமனு சர்க்கீ வாக்கே புகன்றனன் போலு மென்ற உரைதனக் குரைத்த வாறே யுரைத்தன னுலக மெல்லாம் இரைதனக் கென்று மாற்றா வெரிபடு வெகுளித் தீயான். | (இ - ள்.) இரத நூபுரத்தை ஆள்வான் - இரதநூபுரச் சக்கிரவாளத்தை ஆட்சி செய்கின்ற சடிமன்னன், உனை வஞ்சித்து - உன்னை வஞ்சனை செய்து, புதல்வியை - தன் மகளாகிய சுயம்பிரபையை, புரிமனுசர்க்கு ஈவாக்கே புகன்றனன் - விழைவுடைய மானிடர்க்குக் கொடுப்பேன் என்னும் சொல்லையே கூறினன், என்ற - என்று ஒற்றரால் தனக்குக் கூறப்பட்ட, உரை - மொழியையே, தனக்கு உரைத்தவாறே உரைத்தனன் - தனக்கு ஒற்றர்கள் உரைத்தபடியே எடுத்து மொழிந்தான், உலகம் எல்லாம் - எல்லா உலகமும் ஒருங்கே திரண்டும், என்றும் - ஒருபொழுதேனும், தனக்கு இரை ஆற்றா - தனக்கு இரையாகுதற்குப் போதியவாகா, எரிபடு வெகுளித்தீயான் - பற்றி எரிதலையுடைய சின நெருப்புடையனாகிய அச்சுவகண்டன். ( ) இரத நூபுர,,,,,, போலும் என்னுமளவும் ஒற்றர் கூற்றை அச்சுவ கண்டன் கொண்டு கூறியபடியாம். சினமிகுதியால் அவ்வொற்றர்கூற்றைப் பன்முறையும் திருப்பித் திருப்பிக் கூறினான் என்க. | ( 28 ) | | 1159. | முரைசொலி முழையி னுள்ளான் முழங்குகின் றதனோ டொப்ப விரையொலி விளங்கு தாரான் விளம்பிய வெகுளி மாற்றம் அரைசர்க 3ளாங்குக் கேட்டா ரடிகண்மற் றிதற்கோ விவ்வா றுரைசெல முனிவ தென்றோ ரொல்லொலி யெழுந்த தன்றே. | | |
| (பாடம்) 1எனைவஞ்சித்து. 2புரிமனுசர்க்கீவாகே யிவா கனன்றன. 3ளிதனைக் கேட்டே யிதனுக்கோ வடிகளிவ்வா. | | |
|
|