பக்கம் : 738
 
 
1164. இனியிருந் தென்னை பாவ
     மெழுமின் போய்ப் பொருது மென்பார்
1முனிவன செய்த வேந்தன்
     முடித்தலை கொணர்து மென்பார்
கனிவளர் கிளவி யாளைக்
     கைப்பற்றித் தருது மென்பார்
பனிவரை யரசர் மாற்றம்
     பற்பல பரிதி வேலோய்.
 

     (இ - ள்.) இனி இருந்து என்னை பாவம் - இனியும் செய்வன செய்யாமல்
வாளாவிருப்பதிற் பயன் என்னாம், இஃதொரு பாவமாயிற்று, எழுமின் போய்ப் பொருதும்
என்பார் - புறப்படுங்கோள் சென்று போர்புரிவோம் என்று கூறுவர் சிலர், முனிவன செய்த
வேந்தன் - நம் அரசன் சினப்பதற்குரிய செயலைச்செய்த திவிட்டனுடைய, முடித்தலை
கொணர்தும் என்பார் - முடிக்கலனையுடைய தலையை இன்னே கொண்டு வருவோம் என்று
சிலர் இயம்புவர், கனிவளர் கிளவியாளைக் கைப்பற்றித் தருதும் என்பார் - கற்பகக்கனி
போன்று இனிமையை வளர்க்கின்ற மொழியையுடைய சுயம்பிரபையைப் பிடித்துக்கொண்டு
வந்து நம்மரசனுக்குக் கொடுப்போம் என்பர் ஒரு சிலர், பனிவளர் அரசர் மாற்றம் பற்பல -
உள் நடுக்கமுடைய அவ்வரசர் இவ்வாறு சொல்லளவானே பேசிய மறமொழிகள்
பற்பலவாம், பரிதிவேலோய் - கதிரவனைப்போன்று ஒளிவிடும் வேற்படையை உடைய
வேந்தர்பெருமானே, (எ - று.)

பரிதி வேலோய் என்றது, ஒற்றன் சடியை விளித்த தென்க. இருந்தென்னை, எழுமின்,
போய்ப் பொருது மென்பாரும், முடித்தலை கொணர்தும் என்பாரும், கிளவியாளைப் பற்றித்
தருதும், என்பாருமாய் அவர் பேசிய மாற்றம் பற்பல என்றான், என்க.
 

( 34 )

 

1165. கனகசித்திரன் மறமொழி
     சினமெனப் பட்ட தீயுட்
பிறந்தது செருக்கு நன்னீர்
     மனவுண வுண்டு 2மானப்
3பூணின்ற வயிர வொள்வாள்
     4அனலதொன் றகத்த தாக
வாரமர் குருதி வேட்டுக்
     கனல்வதோர் கால வொள்வாள்
கடைக்கணித் தொருவன் சொன்னான்.
     

 


     (பாடம்) 1முனிவாணம். 2மாளப். 3 பூநின்ற. 4அனல்தோன்