பக்கம் : 743
 

     கனகசித்திரன் கூறிய பின்னர், அச்சுவகண்டன் தம்பியாகிய, வச்சிரகண்டன் என்பான்,
யாங்கள் உயிருடன் இருக்கும் போழ்தே நமக்கொரு பகையுண்டாயிற்றென்றல்
நாணுத்தகவுடைத்து; நம் மறம் போயிற்றுப் போலும் என்று கண் சிவந்தான், என்க.
 

( 41 )

 

1172. மகரமால் கடலை யல்லாற் சிறுகய மதலை சேரா
சிகரமால் யானை வேந்தே தானவர் செருவன் றாயி
1னிகரலா நீசர் தம்மேல் நீலெசற் 2பாற்றன் றென்று
புகரெரி யவிக்க லுற்றான் பொழிமழை பொழிவ தொத்தான்.
 
     (இ - ள்.) மகரமால் கடலை யல்லால் - மகர மீன்கள் வாழும் பெரிய கடலின்கட்
சேர்வதல்லது, மதலை-மரக்கலங்கள், சிறு கயம் சேரா - சிறிய குளத்தைச் சேரமாட்டா,
சிகரமால் யானை வேந்தே - மத்தமுடி அணிந்த அரசுவாக்களையுடைய மன்னனே,
தானவர் செரு அன்றாயின் - அசுரர்கள்பால் போர் செய்வதாயின் செல்வதல்லது, நிகரிலா
நீசர் தம்மேல் - நினக்கு ஒரு சிறிதும் ஒப்பற்ற கீழோராகிய மனிதரிடத்தே, நீ செலற்பாற்று
அன்று - நீ போர் செய்யச் செல்லும் பான்மையை அல்லை, என்று புகர் எரி
அவிக்கலுற்றான் - என்று கூறிப் பெரிய சினநெருப்பை அவிக்கின்றவனாகிய வச்சிர
கண்டன், பொழிமழை பொழிவதொத்தான் - மிக்குப் பொழிகின்ற மழையை
ஒத்தவனானான், (எ - று.)

கடலிடத்தே செல்வதல்லது மரகலம், சிறிய குளத்திலே சேருமோ, வேந்தே நினக்குச்
சிறிதும் நிகரிலாப் பொள்ளல் யாக்கை மானுடரைப் பொருதற்கு, நீ போதல் தகுதியன்று,
என்று அச்சுவ கண்டனுடைய உள்ளம் குளிர உரைத்தான், என்க.
 

( 42 )

அச்சுவகண்டன் சினந் தணிதல்

1173. வேறுவே றாகி நின்று வெஞ்சினஞ் செருக்கி விஞ்சைக்
கேறனான் றம்பி மாரு மக்களு மின்ன போல்வ
கூறினார் கூற லோடுங் குரையழ லவிவ தேபோல்
ஆறினா னென்னை செய்யு 3மாயபண் பதுவ தானால்.
 
     (இ - ள்.) விஞ்சைக்கு ஏறு அனான் - வித்தியாதரருலகிற்குச் சிங்கத்தை ஒத்த
அச்சுவகண்டன், தம்பிமாரும் மக்களும் - தன் தம்பியரும் மக்களுமாவார், வேறு வேறாகி
நின்று - வெவ்வேறாய்த் தனித்து நின்று,

 


     (பாடம்) 1நிகரிலா. 2பாலதன்று. 3மாகு பண்