பக்கம் : 748 | | வெல்லற்கு அமைவதாம், என்று - என்றிவ்வாறு, அங்கு ஒருவன் ஓவுதலின்றி ஓதிவைத்தது - அவ்விடத்தே ஒரு சாத்தன் ஒழிவில்லாதே ஓதிநூலின்கண்ணே வைத்தது யார்க்கோ எனில்?, பூவினும் - நில்லாமையே இயல்பாகவுடைய இவ்வுலகத்தே, சாவதை அஞ்சுவார்க்கும் - இறத்தலை அஞ்சும் மடவோர்க்கும், தகைமையில்லவர்க்கும் - மறத்தகுதியில்லாத எளியோர்க்குமே யாம், என்றான் - என்று கூறினான், (எ - று.) போர் வெல்லலுறும் அரசர், எண்ணித் துணிதல் வேண்டும் என்று அரசியல் நூலிற கூறியது, இறத்தலை அஞ்சுவோர்க்கும், மறத்தன்மையில்லோர்க்குமே யல்லால், எம்மனோர்க்கன்று. என்றான் என்க. எனவே, இனி ஏதும் எண்ணற்க; போர்க்குப் புறப்படுக, என்றபடியாம். | (49) | | அச்சுவகண்டன் அரிசேனனைப் பாராட்டல் | 1180. | அழலவி ரலங்கல் வேலோ னவ்வேரி சேன னென்பான் கழலவன் காதற் றோழன் 1கனன்றவன் கருதிச் சொன்ன மொழியெதி ருலக மாள்வா னுவந்தவன் 2முகத்தை நோக்கிப் பழிபெரி தொழியச் சொன்னான் படைத்திற லாள னென்றான். | (இ - ள்.) அழல்அவிர் அலங்கல் வேலோன் - தீயைக்காலும் வெற்றிமாலை சூட்டப்பட்ட வேற்படையையுடைய, அ அரிசேனன் என்பான்- அந்த அரிசேனன் ஆகிய, கழலவன் காதல் தோழன் - வீரக்கழலையணிந்த அச்சுவகண்டனுடைய அன்பிற்குரிய நண்பன், கருதிச் சொன்ன - ஆராய்ந்து கூறிய மொழிஎதிர் - மொழிகளுக்கு மறுமாற்றமாக, உலகம் ஆள்வான் - அச்சுவகண்டன், உவந்து - மனம் மகிழ்ந்து, அவன் முகத்தை நோக்கி - அவனுடைய முகத்தை விரும்பிப் பார்த்து, படைத்திறலாளன் - போர்ப்படையின்கண் ஆற்றல்மிக்கவனாகிய அரிசேனன், பழிபெரிது ஒழியச் சொன்னான் - பெரிதும் நம்பழி ஒழிந்துபோமாறு நன்கு கூறினான், என்றான் - என்று முகமன் மொழிந்தான். இது முன்னிலைப் புறமொழி. தன் தோழனாகிய அரிசேனன், நன்கு பழியொழியக் கூறினான்; அவன் படைத்திறலாளன் ஆதலின், என்று அச்சுவகண்டன் அரிசேனனைப் பாராட்டினன் என்க. பழியாவது, தன் அனைய திறல் மறவர் மந்திரசாலையிலிருந்து ஆராய்தல், என்பது அச்சுவகண்டன் கருத்துமாம் என்க. | (50) | கருடக் கொடியோன் போர்த்திறம் வினாதல் | 1181. | பொருவதோ வெளிதி யாங்கள் பொருந்திற முரைமி னென்னை மருவிய 3மனிதப் போரோ வான்கெழு தெய்வப் போரோ | |
| (பாடம்)1 கனன்றவன். 2 முகத்து. 3 மனிசர். | | |
|
|