பக்கம் : 757 | | ஆராது - உண்ணாது, காதலர் மார்பிலே விருப்பத்தோடே பாய்ந்து மூழ்கும் மகளிர் கண்போல் பகைவர் மார்பிடத்தே மூழ்கும் நம் மறவாள், நம் மருங்கிற் கட்டுண்டு ஊண் பெறாது பசித்துக் கனல்ப, இன்று விஞ்சையர் குருதியை நன்கு பருகிப் பசிதணியும் என்றார் என்க. | ( 63 ) | | 1194. | ஆள்வரை யனைய தானை யச்சுவக் கிரீவ னென்னு நீள்வரை 1மருங்கி னின்ற 2திருவெனு மருவி நீத்தந் தாள்வரை யிழிந்து வந்து தகைமணி நீல வண்ணன் வாள்வரை யகல மென்னுங் கருங்கடன் மடுக்கு மன்றே. | (இ - ள்.) ஆள்வரை அனைய தானை - தன்னால் ஆளப்படுகின்ற மலைகளை ஒத்த யானைப் படையையுடைய, அச்சுவக்கிரீவன் என்னும் - அச்சுவகண்டன் என்று கூறப்படுகின்ற, நீள்வரை மருங்கின் நின்ற - நீண்டமலையின்கண் நிலைத்துநின்ற, திருஎனும் அருவிநீத்தம் - செல்வம் என்னும் அருவியையுடைய நீர்வெள்ளம், தாள்வரை யிழிந்துவந்து - அம்மலையின் அடி வழியே இறங்கி ஓடிவந்து, தகைமணி நீலவண்ணன் - தகுதியையுடைய நீலமணி வண்ணனாகிய திவிட்டன் என்னும், வாள்வரை - ஒளிமிக்க வரை போலும், அகலம் என்னும் - மார்பு என்று கூறப்படும், கருங்கடல் மடுக்கும் அன்றே - கரிய கடலின் அகத்தே நிறையும்: அன்றே: அசை, (எ - று.) வரையனைய தானை என்னும் உவமையால் யானைத்தானை என்க. அச்சுவகண்டன் என்னும் மலையிடைநின்ற திரு என்னும் அருவி அதன் தாள்வழியே இழிந்து திவிட்டநம்பியின் அகலம் என்னும் கடலிலே கலக்கும் என்றார் என்க. தாள் - முயற்சி, அடி என்னும் பொருள் ஆகலின் அச்சுவகண்டன் தாள் என்றது - அச்சுவகண்டன் முயற்சியாலே என்றும் அச்சுவகண்டன் என்னும் மலையின் அடி வழியாக என்றும் பொருள்படல் காண்க. | ( 64 ) | | 1195. | ஆதலா லதனு ணாமு மயிற்படைப் புணைகள் பற்றி 3யேதிலா மன்ன ரென்னு மிருமரக் கடப்பு வாரி மீதுலாம் வெகுளி யென்னும் வெவ்வழன் முழங்க மாட்டிக் காதலார் 4கண்கள் பூப்பக் காய்த்துதுங் 4கைகோளென்பார். | | |
| (பாடம்) 1மருங்கிற் றாழ்ந்த. 2 திருவென்னும். 3 யேதில. 4 கணங்கள். 4 கைகொள். | | |
|
|