பக்கம் : 763 | | (இ - ள்.) ஓதிய விஞ்சை வாய்ப்ப - தன்னால் ஓதப்பட்ட மந்திரங்கள் தனக்குப் பயன்படுவனவாகப் பொருந்தா நிற்ப, உலகு அடிப்படாது நின்ற - உலகத்தின் கண்ணே பிறந்துழன்று வருகின்ற வழக்கொழிந்து நின்ற, ஆதி சால் அமர கற்பம் ஆம் என - தலைமைத் தன்மை பொருந்திய தேவர்கள் வாழ்தற்கிடமான கற்பலோகத்திருக்குமாறு போல, அமருங்காலை - இனிதின் அமர்ந்து வாழ்வுறும் காலத்தே, உருவக்காளை செவிசுடு சரம்பெய்தூணி மாதிரத்து ஒசிந்தவேபோல் - அழகிய காளை போன்ற திவிட்ட நம்பியினுடைய செவிகளைச் சுட்டெரிக்கும் நெருப்புப் பகழிகளை நிறையப் பெய்து வைக்கப்பட்ட அம்புக் கூடுகள் வானிடத்தே இயங்கி வந்தனபோன்று, இருவர் தூதுவர் ஒருங்கு வந்து நின்றார் - இரண்டு விச்சாதரராகிய தூதுவர்கள் வான்வழியாக ஒருசேர வந்து திவிட்டனுக்கு முன்னர் நின்றார், (எ - று.) சுடுசரம் பெய்தூணியைப் போன்ற தூதுவர்கள் என்க. அவர் கொண்டுவரும் செய்திகள் - அம்புபோன்று இன்னா செய்வன வாதலின். அவற்றை அகத்தே சுமந்துவரும் தூதர்கள் அம்புபெய்தூணிகளை ஒத்தனர் என்க. திவிட்டநம்பி சுயம்பிரபையோடு புதுமணம் புணர்ந்தின்புற்றிருத்தலால், ஆதிசால் அமரகற்பத்தில் இருக்குமாறு போல இருக்கும்பொழுது என்று உவமித்தார். ஆதி - இறைவன் எனினுமாம். அமரகற்பம் - தேவருலகம். | ( 73 ) | அத்தூதர்கள் கூறும் செய்தி | 1204. | பொன்னவிர் திகிரி யாளும் 1புரவல ருரைப்ப வந்த மன்னவன் றமரம் யாமே வாய்மொழி கேண்மின் மன்னீர் கன்னியைத் 2தருதி ரோவக் கன்னியை மகிழ்ந்த காளை யின்னுயிர் தருதி ரோவிவ் விரண்டிலொன் றுரைமி 3னென்றார். | (இ - ள்.) பொன்அவிர் திகிரி ஆளும் புரவலன் உரைப்ப வந்த - பொன்னொளி விரியும் ஆழிப்படையையுடைய அச்சுவகண்டன் என்னும் மன்னவன் ஏவுதலாலே வந்துள்ள, மன்னவன் தமரம்யாம் - அம்மன்னவனைச் சார்ந்த தூதர்கள் யாம், மன்னீர் - அரசர்களே, வாய்மொழிகேண்மின் - எம்முடைய மொழியைக் கேளுங்கள், கன்னியைத் தருதிரோ - சுயம்பிரபையை எம்மன்னனுக்குக் காணிக்கைப் பொருளாகத் தருவீர்களோ? அல்லது, அக்கன்னியை மகிழ்ந்த காளை - அச்சுயம்பிர பையை மணந்துகொண்ட திவிட்டனுடைய, இன்னுயிர் தருதிரோ - இனிய உயிரைத் தருவீர்களோ?, இவ்விரண்டில் ஒன்று உரைமின் என்றார் - இவ்விரண்டில் உங்களுக்கு விருப்பமானதொன்றைத் துணிந்து கூறுங்கோள் என்று கூறினர், (எ - று.) | |
| (பாடம்) 1 புரவல னுருவப் பைந்தார். 2 தருவிரோவிக். 3 னென்றான். | | |
|
|