பக்கம் : 769
 

     மலையிடத்தே இருந்து நம்பகைவர் நங்கை திறத்து இவ்வாறு பேசுதல் கூடுமல்லால்,
எம் கண்காணும் தொலைவில் நின்று, இவற்றைக் கூறினராயின் அன்றோ அவர் உரை
பொருள் உடையதாம் என்றார் என்க.
 

( 83 )

 

1214. கலைமிசை யினியசொற் கன்னி காளைதன்
னிலைமிசை யலங்கன்மார் பிசையக் கேட்டுமோர்
மலைமிசை மறைத்துவா யுரைக்கும் வல்லதிற்
1சிலைமிசைத் தோளினான் சேவ கங்களே.
 
     (இ - ள்.) கலைமிசை இனிய சொல்கன்னி - கலையின்பத்தினும் காட்டில் உயரிய
இனிமையுடைய சொற்களையுடைய சுயம்பிரபை நல்லாள், காளைதன் நிலைமிசை அலங்கல்
மார்பு இசையக் கேட்டும் - திவிட்டனுடைய உறுதியுடையதும் மேலே மலர்மாலை
அணியப்பட்டதுமாகிய மார்பினிடத்தே பொருந்திய செய்தியைக் கேள்வியுற்றிருந்தேயும், ஓர்
மலைமிசை மறைந்து - தான் தன் ஒப்பற்ற மலையிடத்தே ஒளிந்திருந்து, வாய் உரைக்கும் -
வெறும் வாயான் மட்டும் மறங்கூறும், மிசைசிலைத் தோளினான் - வில்மேலே
கிடக்கப்பெற்ற தோள்களையுடைய அச்சுவகண்டனுடைய, சேவகங்கள் வல்லதுஇல் -
ஆண்மையிற் சிறந்த ஆண்மை பிறிதில்லை, (எ - று.)

சிலைமிசைத் தோளினான் - கல்லினும் உயர்ந்த தோளான் எனினுமாம். அச்சுவகண்டன்
மலையில் மறைந்திருந்து கூறும் வறுஞ்சொல், அவன் ஆண்மையற்றவன் என்பதை
விளக்கும் என்றார், என்க.
 

( 84 )

அரசர்கள் தூதுவர்க்குக் கூறல்

1215. துன்னிவந் திவனடி 2தொழுவ னேலுயிர்
தன்னதா மன்றெனிற் றனதன் றாதலான்
மன்னுயி ருவக்குமோ மானம் வேண்டுமோ
வென்னவ னுவப்பதென் றெண்ணி வம்மினே.
 
     (இ - ள்.) துன்னிவந்து இவன் அடி தொழுவனேல் - நெருங்கி வந்து இத்திவிட்ட
நம்பியின் திருவடிகளைத் தொழுது புகல்புகுவான் எனில், உயிர் தன்னதாம் -
அவ்வச்சுவகண்டனுடைய உயிர் அவனுக்கு உரியதாகும், அன்றெனில் - அது
செய்யமாட்டான் ஆயின், தனது அன்று - அவ்வுயிர் அவனுடையதாகாது, ஆதலான் -
அவ்வாறாகலான், மன் உயிர் உவக்குமோ - உம்மன்னன் அவன்கண் நிலைபெற்ற உயிரை
விழை வானோ, இன்றேல்,

 


     (பாடம்) 1சிலை மிகு. 2 வணங்கு மேலுயிர்.