பக்கம் : 769 | | மலையிடத்தே இருந்து நம்பகைவர் நங்கை திறத்து இவ்வாறு பேசுதல் கூடுமல்லால், எம் கண்காணும் தொலைவில் நின்று, இவற்றைக் கூறினராயின் அன்றோ அவர் உரை பொருள் உடையதாம் என்றார் என்க. | ( 83 ) | | 1214. | கலைமிசை யினியசொற் கன்னி காளைதன் னிலைமிசை யலங்கன்மார் பிசையக் கேட்டுமோர் மலைமிசை மறைத்துவா யுரைக்கும் வல்லதிற் 1சிலைமிசைத் தோளினான் சேவ கங்களே. | (இ - ள்.) கலைமிசை இனிய சொல்கன்னி - கலையின்பத்தினும் காட்டில் உயரிய இனிமையுடைய சொற்களையுடைய சுயம்பிரபை நல்லாள், காளைதன் நிலைமிசை அலங்கல் மார்பு இசையக் கேட்டும் - திவிட்டனுடைய உறுதியுடையதும் மேலே மலர்மாலை அணியப்பட்டதுமாகிய மார்பினிடத்தே பொருந்திய செய்தியைக் கேள்வியுற்றிருந்தேயும், ஓர் மலைமிசை மறைந்து - தான் தன் ஒப்பற்ற மலையிடத்தே ஒளிந்திருந்து, வாய் உரைக்கும் - வெறும் வாயான் மட்டும் மறங்கூறும், மிசைசிலைத் தோளினான் - வில்மேலே கிடக்கப்பெற்ற தோள்களையுடைய அச்சுவகண்டனுடைய, சேவகங்கள் வல்லதுஇல் - ஆண்மையிற் சிறந்த ஆண்மை பிறிதில்லை, (எ - று.) சிலைமிசைத் தோளினான் - கல்லினும் உயர்ந்த தோளான் எனினுமாம். அச்சுவகண்டன் மலையில் மறைந்திருந்து கூறும் வறுஞ்சொல், அவன் ஆண்மையற்றவன் என்பதை விளக்கும் என்றார், என்க. | ( 84 ) | அரசர்கள் தூதுவர்க்குக் கூறல் | 1215. | துன்னிவந் திவனடி 2தொழுவ னேலுயிர் தன்னதா மன்றெனிற் றனதன் றாதலான் மன்னுயி ருவக்குமோ மானம் வேண்டுமோ வென்னவ னுவப்பதென் றெண்ணி வம்மினே. | (இ - ள்.) துன்னிவந்து இவன் அடி தொழுவனேல் - நெருங்கி வந்து இத்திவிட்ட நம்பியின் திருவடிகளைத் தொழுது புகல்புகுவான் எனில், உயிர் தன்னதாம் - அவ்வச்சுவகண்டனுடைய உயிர் அவனுக்கு உரியதாகும், அன்றெனில் - அது செய்யமாட்டான் ஆயின், தனது அன்று - அவ்வுயிர் அவனுடையதாகாது, ஆதலான் - அவ்வாறாகலான், மன் உயிர் உவக்குமோ - உம்மன்னன் அவன்கண் நிலைபெற்ற உயிரை விழை வானோ, இன்றேல், | |
| (பாடம்) 1சிலை மிகு. 2 வணங்கு மேலுயிர். | | |
|
|