நஞ்சு இவர் வேல் நரபதியை - நீண்ட மறக்கழலை யணிந்த நஞ்சு தடவப்பெற்ற வேற்படையையுடைய பயாபதி மன்னனை; ஆஇடை - அவ்விடத்திலே; வெம்சுடர் வாளினர் - வெவ்விய ஒளிபொருந்திய வாட்படையை யுடையவர்களும்; விசித்த கச்சையர் - இறுகக் கட்டப்பெற்ற இடைக்கட்டை யுடையவர்களுமாகிய, கஞ்சுகி அவர்கள் - சட்டை அணிந்த காவலர்கள்; மெய் காவல் ஓம்பினார் - திருமேனியைப் பாதுகாத்தல் செய்தார்கள். (எ - று.) மஞ்சு - முகில். நரபதி - பயாபதி. கஞ்சுகி - வடசொல் என்பர். ஆயிடை - அப்பொழுது என்றும் பொருள் கூறலாம். இடத்தை யுணர்த்துஞ் சொற்கள் காலப்பொருளையுங் குறிக்கும். |
( 23 ) |
அரசன் திருவோலக்க மண்டபத்தை யடைதல் |
93. | வாசநீர் தெளித்தலர் பரப்பி வானகம் 1ஏசுநீ ளிருக்கைய விலங்கு சென்னிய மூசுதே னெடுங்கடை மூன்றும் போய்ப்புறத் தோசைநீள் மண்டப முவந்த தெய்தினான். |
(இ - ள்.) வாசம் நீர் தெளித்து - மணங்கமழும் நீர் தெளிக்கப்பட்டு; அலர்பரப்பி - மலர்கள் பரப்பப்பட்டு; வான் அகம் ஏசு நீள் இருக்கைய - விண்ணுலகத்தையும் இகழும்படியான நீண்ட இடத்தையும் அவற்றின்கண் அணைகளையும் உடையனவும், இலங்கு சென்னிய - விளங்குகின்ற முடியை யுடையனவுமான; மூசுதேன் நெடுங்கடை மூன்றும் - நெருங்குகின்ற வண்டு களையுடைய நீண்ட திருவாயில்கள் மூன்றையும்; போய் - தாண்டிச் சென்று; புறத்து ஓசை நீள்மண்டபம் அது - ஒலிகள் எதிரொலி செய்துபுறத்தே நீளுதற்குக் காரணமான திருவோலக்க மண்டபமாகிய; உவந்தது எய்தினான் - தான் விரும்பியதனை அடைந்தான். (எ - று.) தெளித்து - தெளிக்கப்பட்டு; பரப்பி - பரப்பப்பட்டு என்க. வாசநீர் - பனிநீர் முதலியன. அதனைத் தெளித்தல் மணமுண்டாதற்கும் துகளடங்கற்கும். அலர் பரப்புதல் அரசன் அடிகளில் கல்முதலியன உறுத்தாதிருத்தற்கு. சென்னி என்றது மண்டபத்தின் மேலுள்ள முடிகளை. ஓசை - புகழுமாம். |
(24) |
|
(பாடம்) 1. நறுமலர் தானுந். 2. தேவன்மாட்டு. தேனமாட்டு. |