பக்கம் : 770
 

     மானம் வேண்டுமோ - உயிரீந்தும் ஓம்பற்பாலதாகிய மானத்தை விரும்புவானோ,
என் அவன் உவப்பது என்று - இவ்விரண்டில் வைத்து எதனை அவன் விரும்புகின்றான்
என்பதனை, எண்ணி வம்மின் - அவனுடன் கூடி ஆராய்ந்து தெளிந்து மீண்டும் வருவீர்,
(எ - று.)
இம்மொழிகள் அச்சுவகண்டன் தூதர் உரைத்த மொழிகளுக்குச் சமமான மொழிகளாதல்
காண்க.
 

( 85 )

தெய்வ மொழி உண்டாதல்

1216. என்றவர் மொழிதலு மெழுந்து தூதுவர்
சென்றன ராயிடைத் தெய்வ வாய்மொழி
1வென்றுவீற் றிருக்குமிவ் விடலை யேயென
நின்றது நிலமகள் பரிவு நீங்கினாள்.
 
     (இ - ள்.) என்று அவர் மொழிதலும் - என்று அம்மன்னர்கள் உரைத்தவுடனே,
தூதுவர் எழுந்து சென்றனர் - அவையிற்றைக் கேட்ட விச்சாதரதூதர் அவ்விடத்தை
விட்டுப் புறப்பட்டுச் செல்லா நின்றனர், ஆயிடை - அந்தச் செவ்வியில், தெய்வ
வாய்மொழி - தெய்வமாகிய அசரீரியின் மெய்ம்மொழி, “இவ்விடலையே வென்று
வீற்றிருக்கும்“ என நின்றது - “இத்திவிட்டநம்பியே அச்சுவக்கிரீவனை வென்று
நிலைத்திருப்பான் என்று எழா நின்றது, நிலமகள் பரிவு நீங்கினாள் - நிலம் என்னும்
நல்லாள் அல்லல் தீர்ந்த நெஞ்சினள் ஆயினள், (எ - று.)

என்று தூதர்க்குத் தகுந்த மாற்றங் கூறியவுடன் அவர் இறையருளால் உய்ந்தோமென
எழுந்து போயினர்; அவ்வமயம், அசரீரி நம்பிக்கு வென்றி வீற்றிருக்கும் என்றது: நிலமகள்
பரிவு தீர்ந்தாள் என்க.
 

( 86 )

சுரமையிற் றோன்றிய நன்னிமித்தங்கள்

1217. வரிவளை முரன்றன வான துந்துபி
திரிவன வறைந்தன செங்கண் டீப்பட
முரிவன வீரர்தம் புருவ 2மூரிவிற்
3பரிவிறை 4யின்றிவன் பாடி வட்டமே.
 
     (இ - ள்.) இவன் பாடி வட்டம் - இத்திவிட்ட நம்பியின் இருக்கையிடமெங்கும்,
வரிவளை முரன்றன - வரிகள் பொருந்திய சங்குகள் முழங்கின, வானதுந்துபி திரிவன
அறைந்தன - தேவதுந்துபிகள் எங்கும் சென்று சென்று முழங்கின, பரிவு இறையின்றி -
ஒரு சிறிதும் இரக்கமில்லாமல், வீரர்தம் செங்கண் தீப்பட - மறவர்களுடைய கண்களிலே
தீயுண்டாக, புருவ மூரியில் முரிவன - புருவங்களாகிய பெரிய விற்கள் வளைந்தன, (எ -
று.)

 


     (பாடம்) 1 வென்றி வீற்றிருக்கும். 2மல்லது. 3 பரிவெனு. 4அடிக்குறிப்பு சரியாக தெரியவில்லை.