பக்கம் : 772 | | (இ - ள்.) அரசு இளங்குமரனை - பயாபதி மன்னனின் இளைய மகனாகிய திவிட்டநம்பியை, அனற்று மாற்றலர் - வெகுள்விக்கின்ற பகைவருடைய, முரசினுள் மணிஅரவு உறைந்த - முரசமாகிய இசைக்கருவியினுள்ளே மணியையுடைய பாம்புகள் வதிந்தன, முத்துஅணி நிரைசுடர் நெடுங்குடை அகடு - முத்துக்களால் அழகுறுத்தப்பட்ட ஒளிவரிசையினையுடைய நீண்ட குடையின் அகத்தே, நெய்கனி பிரசங்கள் - நெய்ப்புடைத்தாய்க் கனிதலையுடைய தேன், விலங்கப் புரைபுரை பெய்தவே - தொளைகடோறும் இடையிட்டுத் துளித்தன, (எ - று.) குடையினுள்ளே தேன்கூடு கட்டப்பட்டன என்க. இனி அச்சுவ கண்டன் திறத்து நிகழ்ந்த தீநிமித்தம் கூறுகின்றார். மாற்றலர் முரசினுள் அரவுறைந்தன; குடையினுள்ளே தேன் கூடுகட்டின, என்க. | ( 89 ) | இதுவுமது | 1220. | கதிர்மணித் தேர்க்கொடிஞ் சேறிக் காக்கைக ளெதிரெதிர் சிலம்பின வெரிந்த மாதிர முதிரநீர்ப் புதுமழை சொரிந்த துச்சியி னதிர்தரு கவந்தங்க ளாடி யிட்டவே. | (இ - ள்.) கதிர்மணி தேர் கொடிஞ்சு ஏறி காக்கைள் - ஒளியுடைய மணிகள் பதித்த தேரினது கொடிஞ்சுகளிலே காக்கைள் ஏறியிருந்து, எதிர்எதிர் சிலம்பின - மாறிமாறிக் கரைந்தன, மாதிரம் எரிந்த - திசைகள் தீப்பற்றி எரிந்தன, புதுமழை உச்சியின் உதிரநீர் சொரித்த - புதுவதாய மேகங்கள் வானவுச்சியில் கூடிக் குருதி மழை சொரிந்தன, அதிர்ந்தரு கவந்தங்கள் ஆடியிட்டவே-ஒளியையுடைய குறைத்தலைப் பிணங்கள் கூத்தாடின, (எ-று.) தேர்க் கொடிஞ்சியினில் காக்கைகள் ஏறி மாறிமாறிக் கரைந்தன; திக்குகள் எரிந்தன; குருதிமழை பொழிந்தது; கவந்தமாடின; என்க. | ( 90 ) | இதுவுமது | 1221. | விடவரு மியல்புக டிரிந்து மெல்லியன் மடவர லவரொடு மாறு பட்டனர் படவர வல்குலார் காதிற் பையெனச் சுடர்தரு குழைகடா மழிந்து சோர்ந்தவே. | (இ - ள்.) விடவரும் இயல்புகள் திரிந்து - ஆடவர்கள் தாம் நல்லியல்புகளிற் பிறழ்ந்து, மெல்லியல் மடவரலவரொடு மாறுபட்டனர் - மென்மைத் தன்மையுடைய பெண்டிரொடு பகைக்குணம் உடையராயினர், படஅரவு அல்குலார் - பாம்பினது படத்தை ஒத்த அல்குலையுடைய மகளிர்களின், காதில் - செவிகளிலே பெய்யப்பட்ட, சுடர்தரு குழைகள்தாம் - ஒளி வீசுதலையுடைய தோடுகள், பைஎன அழிந்துசோர்ந்த - மெல்ல நழுவி வீழ்ந்தன, தாம், ஏ : அசைகள், (எ - று.) | | |
|
|