(இ - ள்.) குடையும் கொடியும் குளிர்சாமரையும் - குடைகளும் கொடிகளும் தட்பந்தரும் கவரிமயிர்க் கற்றைகளும், படையும் முடியும் பல சின்னமுமே - போர்க்கருவிகளும் முடிக்கலன்களும் இன்னோரன்ன பிற போர்ச்சின்னங்களும், இடையும் புடையும் இருபால் அகமும் - நடுவிடத்தேயும் முன்பின்னிடங்களினும் இருபக்கங்களின் அகத்தேயும், அடையும் - செறிந்தனவாதலின், படையும் அறிதற்கு அரிதே - அப்படை தானும் யாரானும் அளவிட்டறிதற்கு அரிதாயிற்று, (எ - று.) இதுவும் படையெழுச்சியே கூறிற்று. சின்னம் - தாரை யெனினுமாம். |
( 99 ) |
அச்சுவகண்டன் படை சுரமைநாட்டினை எய்துதல் |
1230. | பொன்றவழ் தேர்கலி மாவொடு 1போதக மென்றிவை யெங்கு மிடம்2பிறி தின்றி நின்றன நின்றது வாட்படை யப்படை 3சென்று பெருந்திசை யார்த்தனர் சேர்ந்தார். |
(இ - ள்.) பொன் தவழ் தேர் கலிமாவொடு போதகம் - பொன்னிறம் தவழ்கின்ற தேர்களும் புரவிகளோடு யானைகளும், என்று இவை எங்கும் இடம் பிறிது இன்றி நின்றன - என்று கூறப்பட்ட இம்மூவகைப் படைகளும் தாந்தாம் நின்றவிடமன்றி இயங்குதற்குப் பிறிதிடம் எவ்விடத்தும் பெறாமையால் நின்றபடியே நின்றன, வாள்படை நின்றது - வாளேந்திய காலாட்படை முன் அணியில் நின்றது, அப்படை - அக்காலாட்படை மறவர், சென்று பெருந்திசை ஆர்த்தனர் சேர்ந்தார் - போய்ப் பெரிய திசைகள் அதிர ஆரவாரித்துச் சுரமை நாட்டை எய்தினர், (எ - று.) தேரும் யானையும் குதிரையும் நெருங்கி இயங்க இடம் பெறாமல் நின்றன; முன்னின்ற காலாட் படை. சுரமைநாட்டை எய்திற்று. |
( 100 ) |
அப்படைகள் போதனநகரத்தை அடைதல் |
1231. | கொண்டல் கிளர்ந்து பரந்து 4குவிந்தலை மண்டுவ போன்மண மாநகர் முன்னி விண்டவழ் மின்னிடு வாளினர் வில்லின ரெண்டிசை யும்மிருள் கூர விழிந்தார். |
|
|
(பாடம்) 1 வாரணம். 2 பிறவின்றி. 3 சென்று பெருந்திசை யார்த்திசை யார்த்தார். 4 பெருங்கடல். |